பதன்கோட் தாக்குதல்: ராணுவத்தை அனுப்பிதற்காக பஞ்சாப் அரசிடம் ரூ.6.35 கோடி கேட்கிறது மத்திய அரசு
டெல்லி: மத்திய ராணுவ படையை பதன்கோட் விமானப்படை தளத்துக்கு அனுப்பிதற்காக ரூ.6.35 கோடியை தருமாறு பஞ்சாப் மாநில அரசை மத்திய அரசு கேட்டுள்ளது.
ஜனவரி 2-ம்தேதி பதன்கோட் விமானப்படை தளத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் ஜெய்ஷ்-இ-முகமது அமைபபைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்திய ராணுவத்தினர் 7 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த நிலையில் தீவிரவாதிகளின் தாக்குதல்களை முறியடிப்பதற்காக துணை ராணுவப் படையை அனுப்பியது மத்திய அரசு.

80 மணிநேர சண்டைக்கு பிறகு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால் தேடுதல் மற்றும் பாதுகாப்பு பணிக்காக ஜனவரி 27-ம் தேதி வரை துணை ராணுவப்படை பஞ்சாபில் முகாமிட்டிருந்தது. இந்த காலக்கட்டத்தில் துணை ராணுவத்திற்கு ரூ.6.35 கோடி செலவானதாகவும், அதை கொடுக்க வேண்டும் என்றும் பஞ்சாப் மாநில அரசுக்கு மத்திய அரசு பில் அனுப்பியுள்ளது. இந்த தொகையை தர பஞ்சாப் அரசு மறுத்துவிட்டது.
ஆனால் பதான்கோட் தாக்குதலில் ராணுவம் ஈடுபட்டது இந்திய நாட்டின் நலன் சார்ந்தது. எனவே மாநில அரசிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என்று பஞ்சாப் மாநில துணை முதல்வர் சுக்பீர்சிங் பாதல் தெரிவித்துள்ளார்.
மேலும் ராணுவத்தினர் பதன்கோட் மற்றும் எல்லைப் பகுதிகளில் மட்டுமே முகாமிட்டிருந்தனர். அப்போது சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நடிவடிக்கையை மாநில அரசு தான் மேற்கொண்டது எனவும் அவர் தெரிவித்தார். பஞ்சாப் மாநிலத்தில் பாஜக - அகாலிதளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications