ஓடும் ரயிலில் பயணியின் விரலைக் கடித்த எலி... ரூ. 13000 நஷ்டஈடு வழங்க கோர்ட் உத்தரவு
எர்ணாகுளம்: ஓடும் ரயிலில் எலிக்கடிக்கு ஆளான பயணிக்கு, ரயில்வே நிர்வாகம் ரூ.13 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என எர்ணாகுளம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம், கோட்டயத்தைச் சேர்ந்தவர் சி.ஜே.புஷ். கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி இவர், துரந்தோ விரைவு ரயிலில் மூன்றாம் வகுப்பு குளிர்சாதன வசதியுடன்கூடிய பெட்டியில் மும்பையிலிருந்து ஏர்ணாகுளத்துக்கு பயணம் செய்துள்ளார்.

அப்போது அதிகாலை 4.30 மணியளவில் புஷ் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த போது, ரயில் பெட்டிக்குள் சுற்றித் திரிந்த எலி ஒன்று, அவரது இடது கை ஆள்காட்டி விரலைக் கடித்தது. வலியால் அலறித் துடித்து கண் விழித்துப் பார்த்த புஷ், கை விரல் எலிக் கடித்து ரத்தம் வடிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக இது குறித்து ரயில்வே நிர்வாகத்திடம் அவர் புகார் அளித்தார். ஆனபோதும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதனால் எர்ணாகுளத்தில் தனியார் மருத்துவமனையில் எலிக்கடிக்கு அவர் சிகிச்சை பெற்றார்.
அதனைத் தொடர்ந்து, எலிக் கடியால் ஏற்பட்ட மருத்துவச் செலவிற்கு நஷ்ட ஈடு தரக்கோரி, புஷ் ரயில்வே நிர்வாகத்திற்கு எதிராக எர்ணாகுளம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
வழக்கு விசாரணையின் முடிவில், ரயில்வே நிர்வாகம் சேவை குறைபாட்டுடன் செயல்பட்டது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, ரயில்வே நிர்வாகம் மனுதாரருக்கு ரூ.13 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications