குஜராத்தில் மீண்டும் களைகட்டிய 'ரிசார்ட்' அரசியல்- காங். பஞ்சாயத்து உறுப்பினர்கள் ராஜஸ்தானில் தஞ்சம்
குஜராத்தில் ரிசார்ட் அரசியல் மீண்டும் களைகட்டியுள்ளது.
Recommended Video
அகமதாபாத்: மாநில சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புகளின் போது எம்.எல்.ஏக்களை தக்க வைக்க ரிசார்ட்டுகளில் தங்க வைக்கப்பட்டனர். குஜராத்தில் உச்சகட்டமாக பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர் தேர்தல்களில் பஞ்சாயத்து உறுப்பினர்களைத் தக்க வைக்க ராஜஸ்தான் ரிசார்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சுவாரசியம் நிகழ்ந்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் கடந்த ஆண்டு ராஜ்யசபா தேர்தல் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜக பேரம் பேசிவிடக் கூடாது என்பதற்காக கர்நாடகா மாநிலத்துக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தற்போது குஜராத்தில் பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர் தேர்தல்கள் நாளை நடைபெற உள்ளன. இம்முறையும் பஞ்சாயத்து உறுப்பினர்களை பாஜக விலைபேசிவிடக் கூடாது என வியூகம் வகுத்தது காங்கிரஸ்.
இதனால் அகமதாபாத், பதான் மாவட்டங்களைச் சேர்ந்த 34 பஞ்சாயத்து உறுப்பினர்களை ஒரு வாரத்துக்கு முன்னரே ராஜஸ்தான் மாநில நகரங்களுக்கு அனுப்பி பதுங்க சொல்லிவிட்டது காங்கிரஸ். அங்கேயும் கூட ஒரே இடத்தில் அவர்கள் தங்குவதில்லையாம். அடிக்கடி ரிசார்ட்டுகளை மாற்றிக் கொண்டே இருக்கிறார்களாம்.