முதல்வர் பதவிக்கு தகுதியே இல்லாதவர் சசிகலா - சசிகலா புஷ்பா பாய்ச்சல்
தமிழக முதல்வர் பதவிக்கு தகுதியே இல்லாதவர், அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என்று ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.
டெல்லி: அதிமுக சட்டசபைக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விரைவில் தமிழக முதல்வராகவும் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சசிகலா மீது இன்னும் சொத்து குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தமிழத்தின் மிகவும் முக்கியம் வாய்ந்த பொறுப்புக்கு சசிகலா வரலாமா என்று கேள்வி பலரும் எழுப்பியுள்ளனர். தீர்ப்பு சசிகலாவுக்கு எதிராக போகும்பட்சத்தில், அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தேர்தலில் போட்டியிடுவதும் தடைபடும். கட்சியிலும் நிர்வாக சிக்கல்கள் ஏற்படும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சசிகலா சட்டசபைக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா கருத்து கூறியுள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா புஷ்பா, ல்வர் பதவிக்கு சசிகலா நடராஜன் வருவதை தமிழக மக்களும் இளைஞர்கள் விரும்பவில்லை என்றார்.
சசிகலா நடராஜன் அவசரம் அவசரமாக பதவியேற்க பேராசைப் படுவது ஏன்? என்று கேள்வி எழுப்பிய சசிகலா, குற்றச் செயலுக்காக கீழ் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றவர் என்று கூறினார்.
எந்தவிதமான அரசியல் பணிகளிலும் ஈடுபடாதவர், கட்சிக்காக எந்த போராட்டங்களிலும் ஈடுபடாதவர் சசிகலா. சிகலாவிற்கு பதவி வழங்கப்பட்டதை கண்டு அதிமுக தொண்டர்கள் கொதித்து போயுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்புக்காக காத்திருக்கும் சசிகலா முதல்வராக ஆசைப்படலாமா என்றும் கேட்டுள்ளார் சசிகலா புஷ்பா. தமிழக முதல்வர் பதவிக்கு தகுதியே இல்லாதவர், அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என்று ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications