டெல்லி குண்டுவெடிப்பு- புல்லாரின் மரண தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
டெல்லி: டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தேவேந்தர் பால் சிங் புல்லாரின் மரண தண்டனையை நிறைவேற்ற உச்சநீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
1993ம் ஆண்டு டெல்லியில் நடந்த குண்டுவெ்டிப்பு வழக்கில் கைதானவர் புல்லார். இவருக்கு விசாரணைக்குப் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1993ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி டெல்லியில் உள்ள இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்தில் குண்டு வெடித்தது. நாடாளுமன்றத்திற்கு அருகே உள்ளது இந்த அலுவலகம். குண்டுவெடிப்பில் 9 பேர் இறந்தனர். அப்போது இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த மனீந்தர்ஜித் சிங் பிட்டாவைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட புல்லார், கருணை மனுவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அது வெகு காலத்திற்குப் பரிசீலிக்கப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது. பின்னர் அது நீண்ட தாமதத்திற்குப் பின்னர் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து புல்லார் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 2013ம் ஆண்டு புல்லார் கோரியபடி ஆயுள் தண்டனையாக மரண தண்டனையை மாற்ற முடியாது என்று கூறி மரண தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து சீராய்வு மனு ஒன்றை புல்லார் தரப்பு தாக்கல் செய்தது. அது நிலுவையில் இருந்து வருகிறது. இந்த மனு மீது இன்று நீதிபதிகள் அளித்த உத்தரவின்போது, மரண தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டனர்.
மேலும் புல்லாரின் மன நலம் குறித்து அறிக்கைத் தாக்ல் செய்யுமாறும் அவர்கள் உத்தரவிட்டனர். மேலும் மத்திய அரசு மற்றும் டெல்லி அரசுக்கும் இதுதொடர்பாக நோட்டீஸ் அனுப்பவும் அவர்கள் உத்தரவிட்டனர்.
விசாரணை பிப்ரவரி 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2013ம் ஆண்டு உச்சநீதிமன்றம் புல்லாரின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டபோது, மன நல பாதிப்பு, வலிப்பு நோய் உள்ளிட்டவை இருந்தால் மட்டுமே தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றக் கோர முடியும் என்று கூறியிருந்தது.
புல்லார் கருணை மனு மிகவும் தாமதமாக பரிசீலிக்கப்பட்டதை மட்டும் புல்லார் தரப்பு காரணமாக காட்டவில்லை. மாறாக அவருக்கு மன நல ரீதியாக பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், அதற்காக அவர் மன நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதையும் சுட்டிக் காட்டியிருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications