சுதந்திர தினம்: நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு.. இரவுகளில் தீவிர வாகன சோதனை!
டெல்லி: சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் 69வது சுதந்திர தினம் வரும் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போதும் பாதுகாப்பு பலப்படுத்துவது வழக்கம்தான்.

ஆனால் இந்த ஆண்டு சமீபத்தில்தான் பஞ்சாயில் பெரும் தீவிரவாதத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று உளவுத்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருக்கிறது. எனவே, தலைநகர் டெல்லி உள்பட நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் வாகன தணிக்கையிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தலைநகர்
டெல்லியில் பாதுகாப்பு பல மடங்கு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் எல்லைப் புறங்களில் ராணுவத்தினர் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளது.
விமானப் பயணிகளுக்கு அறிவுரை
டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் சென்னை விமான நிலையங்களில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உள்நாட்டு விமானப் பயணிகள் இரண்டு மணி நேரம் முன்பாகவும், பன்னாட்டு விமானப் பயணிகள் இன்னும் சில மணி நேரங்கள் முன்பாகவும் விமான நிலையத்துக்கு வந்துவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வாரம் முழுக்க இந்த நிலை அமலில் இருக்கும்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications