"சகிப்பின்மை"... ஆமீர்கானுக்கு எதிராக உ.பி கோர்ட்டில் தேசதுரோக வழக்கு
உத்தரபிரதேசம்: சகிப்பின்மை குறித்து கருத்து தெரிவித்த பிரபல பாலிவுட் நடிகர் ஆமீர்கான் மீது கான்பூர் நீதிமன்றத்தில் தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மனோஜ் குமார் தீட்சித் என்ற வழக்கறிஞர் கான்பூர் அமர்வு நீதிமன்றத்தில் ஆமீர்கானுக்கு எதிராக வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், ஆமீர்கான் தனது பேச்சின் மூலம் நாட்டை பிளவுப்படுத்த முயற்சிப்பதாகவும், இளைஞர்களின் மனதில் அவர் தவறான எண்ணங்களை உருவாக்க முயற்சிப்பதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கின் விசாரணை வரும் டிசம்பர் மாதம் 1-ம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளது. இதற்கிடையே ஆமீன்கானுக்கு எதிராக சிவசேனா கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மும்பையில் உள்ள ஆமீன்கான் வீட்டின் முன்பாக திரண்ட இந்து சேனா அமைப்பினர் அவருக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்றால் ஆமீர்கான் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என மகாராஷ்ர மாநில சுற்றுசுழல் துறை அமைச்சர் கூறியுள்ளார்.
முன்னதாக, தலைநகர் டெல்லியில் திங்கட்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமீன்கான் இந்தியாவில் நிலவும் சூழலை கண்டு தனது மனைவி கிரண் அஞ்சுவதாகவும் வெளிநாட்டுக்கு சென்று விடலாமா என அவர் தன்னிடம் கேட்டதாகவும் கூறினார். நாட்டின் பாதுகாப்பற்ற உணர்வு பெருகி வருவதேயே இது காட்டுகிறது என்று அவர் தெரிவித்தார். ஆமீர்கானின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் பிறந்ததற்காக தாம் பெருமை கொள்வதாக ஆமீர்கான் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, " இந்தியாவை விட்டு வெளியேறும் எண்ணம் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ள அவர், ஒரு இந்திய குடிமகனான எனக்கு இங்கு வாழ்வதற்கு யாருடைய அங்கீகாரமும் தேவையில்லை. நான் வாழும் இந்த தேசத்தை என் உயிரினும் மேலாக மதிக்கிறேன். எனது கருத்தை வேண்டுமென்றே சிலர் திரித்து வெளியிட்டுள்ளனர்", என்றார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications