இந்திரா, ராஜிவ் ஸ்டாம்புகள் நிறுத்தம்- உபாத்யாய, சியாமா பிரசாத் முகர்ஜி தபால்தலை வெளியிட முடிவு!
டெல்லி: முன்னாள் பிரதமர்கள் இந்திரா, ராஜிவ் காந்தி உருவம் பொறித்த தபால் தலைகளை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் இந்துத்துவா தலைவர்களான தீனதயாள் உபாத்யாய, சியாமா பிரசாத் முகர்ஜி உள்ளிட்டோர் தபால்தலைகளை வெளியிடவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றுள்ள தகவல்கள் விவரம்:

2008ஆம் ஆண்டு நவீன இந்தியாவின் சிற்பிகள் என்ற தலைப்பில் ரூ 5 மதிப்பிலான இந்திரா, ராஜிவ் ஆகியோரது உருவம் பொறித்த சிறப்பு தபால் தலைகளை மத்திய அஞ்சல்துறை வெளியிட்டிருந்தது. மேலும் வெவ்வேறு ரூபாய் மதிப்பிலான ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தி, அம்பேத்கர், சத்யஜித் ரே, ஹோமி பாபா, ஜே.ஆர்.டி. டாட்டா, அன்னை தெராசா ஆகியோரது தபால் தலைகளும் வெளியிடப்பட்டன.

2009 ஆம் ஆண்டு ஈ.வெ. ராமசாமி, சி.வி. ராமன் மற்றும் ருக்மணிதேவி அருண்டேல் ஆகியோரது உருவம் பொறித்த தபால்தலைகளும் இதே தலைப்பின் கீழ் வெளியிடப்பட்டன.
தற்போது ரூ5 மதிப்பிலான தபால் தலைகளை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. (இந்திரா, ராஜிவ் தபால்தலைகள் ரூ5 மதிப்பிலானவை என்பது குறிப்பிடத்தக்கது).
மேலும் நவீன இந்தியாவின் சிற்பிகள் என்ற தலைப்புக்கு பதிலாக இந்தியாவின் சிற்பிகள் என்ற புதிய தலைப்பில் 24 தபால் தலைகளை வெளியிட திட்டமிட்டுள்ளது மத்திய அரசு.

இந்த புதிய தபால் தலைகளில் தீனதயாள் உபாத்யாய, ஜெயபிரகாஷ் நாராயண், சியாமா பிரசாத் முகர்ஜி, ராம் மனோகர் லோகியா ஆகியோருடன் சேர்த்து வல்லபாய் படேல், பாலகங்காதர திலகர், சுபாஷ் சந்திரபோஸ், ராஜேந்திர பிரசாத், மவுலானா அபுல்கலாம் ஆசாத், பகத்சிங், ரவீந்திரநாத் தாகூர், சத்ரபதி சிவாஜி, மகாராணா பிரதாப், விவேகானந்தர், பாரதியார், பண்டிட் ரவிசங்கர், பீம்சென் ஜோஷி, எம்.எஸ். சுப்புலட்சுமி, பிஸ்மில்லா கான் ஆகியோருக்கும் தபால் தலைகள் வெளியிடப்பட உள்ளன.
இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே மத்திய அரசின் விருதுகளில் இந்திரா, ராஜிவ் பெயரை மத்திய அரசு நீக்கியிருக்கும் நிலையில் இருவரது தபால்தலைகளையும் நிறுத்த முடிவு செய்திருப்பது காங்கிரசாரை கொந்தளிக்க வைத்துள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications