டெல்லி சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை நடத்தலாமா? உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு
டெல்லி: டெல்லி சட்டசபையை கலைக்க கோரிய ஆம் ஆத்மி கட்சியின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன பெஞ்ச் விசாரிக்க என உத்தரவிட்டுள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக பொறுப்பேற்றார். இந்நிலையில், லோக்பால் மசோதா நிறைவேற்றம் தொடர்பான விவகாரங்களில், காங்கிரஸ், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சரியான ஒத்துழைப்பு தராததாக குற்றம் சாட்டிய கெஜ்ரிவால், 49 நாட்களில் தன் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, டெல்லியில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முன்வராததால், துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், டெல்லியில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைத்தார். எனினும் சட்டசபை கலைக்கப்படவில்லை.
இதனிடையே, டெல்லி சட்டசபையை கலைத்துவிட்டு, மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று, ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், கவர்னர் இது தொடர்பாக இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இதனால் ஆம் ஆத்மி தலைவர்கள், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், பா.ஜ.,வினர், பிற கட்சி எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க குதிரை பேரம் நடத்தி வருகின்றனர். எனவே மாநில சட்டசபையை கலைத்து விட்டு உடனடியாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்' என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான பெஞ்ச், இவ்வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கஉத்தரவிட்டார். அரசியல் சாசன சிக்கல் உள்ள வழக்கு என்பதால் இதை அரசியல் சாசன பெஞ்ச் விசாரிப்பது சரியாக இருக்கும் என்று உச்சநீதிமன்றம் கருதுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications