டெல்லி சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை நடத்தலாமா? உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு
டெல்லி: டெல்லி சட்டசபையை கலைக்க கோரிய ஆம் ஆத்மி கட்சியின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன பெஞ்ச் விசாரிக்க என உத்தரவிட்டுள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக பொறுப்பேற்றார். இந்நிலையில், லோக்பால் மசோதா நிறைவேற்றம் தொடர்பான விவகாரங்களில், காங்கிரஸ், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சரியான ஒத்துழைப்பு தராததாக குற்றம் சாட்டிய கெஜ்ரிவால், 49 நாட்களில் தன் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, டெல்லியில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முன்வராததால், துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், டெல்லியில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைத்தார். எனினும் சட்டசபை கலைக்கப்படவில்லை.
இதனிடையே, டெல்லி சட்டசபையை கலைத்துவிட்டு, மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று, ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், கவர்னர் இது தொடர்பாக இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இதனால் ஆம் ஆத்மி தலைவர்கள், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், பா.ஜ.,வினர், பிற கட்சி எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க குதிரை பேரம் நடத்தி வருகின்றனர். எனவே மாநில சட்டசபையை கலைத்து விட்டு உடனடியாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்' என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான பெஞ்ச், இவ்வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கஉத்தரவிட்டார். அரசியல் சாசன சிக்கல் உள்ள வழக்கு என்பதால் இதை அரசியல் சாசன பெஞ்ச் விசாரிப்பது சரியாக இருக்கும் என்று உச்சநீதிமன்றம் கருதுகிறது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications