ஜெ. அரசு தொடர்ந்த 5 அவதூறு வழக்குகளையும் டிஸ்மிஸ் செய்யுங்கள்.. சுப்ரீம் கோர்ட்டில் சாமி வழக்கு
டெல்லி: ஜெயலலிதா தலைமையிலான அரசு தன் மீது தொடர்ந்துள்ள 5 அவதூறு வழக்குகளையும் டிஸ்மிஸ் செய்யுாறு கோரி உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியம் சாமி இன்று ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜெயலலிதா கைதாகி சிறைக்குச் செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பு சாமி மீது அவதூறு வழக்குகள் பாய்ந்தன. மொத்தம் 5 வழக்குகள் பதியப்பட்டன.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு இரங்கல் கூட்டம் நடத்த ஜெயலலிதா அனுமதி அளிப்பதாக கூறி டிவிட்டரில் செய்தி போட்டிருந்தார் சாமி. அதேபோல ஜெயலலிதாவை மீண்டும் சிறையில் களி திண்ண வைப்பேன் என்றும், புதிதாக சொத்துக் குவிப்பு வழக்குகள் அவர் மீது பாயும் என்றும் சாமி டிவிட் செய்திருந்தார்.
இதையடுத்து அவர் மீது செப்டம்பர் 16, 17 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் அரசு வழக்கறிஞர் ஜெகன் அவதூறு வழக்குகளைத் தொடர்ந்தார். இதில் அவர் அக்டோபர் 30ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று செஷன்ஸ் கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் செப்டம்பர் 27ம் தேதி ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குப் போய் விட்டார். இந்தச் சூழ்நிலையில், ஜெயலலிதா தன் மீது தொடர்ந்துள்ள அவதூறு வழக்குகளைத் தள்ளுபடி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் இன்று ரிட் மனு தாக்கல் செய்துள்ளார் சாமி. இதையும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக சாமி தாக்கல் செய்துள்ள மனுவில், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்குகளை அதிமுக அரசு தாக்கல் செய்துள்ளது. இது எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது. என்னை கோர்ட்டில் நிறுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இதைப் போட்டுள்ளனர். எனவே ஐந்து வழக்குகளையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மேலும் என் மீதான வழக்குகளில் நான் கோர்ட்டில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்தும் உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார் சாமி.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications