இந்தியா, அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றிய ஆப்கானியர்களை வேட்டையாடுவோம்.. கொக்கரிக்கும் தாலிபான்கள்
காபூல்: இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து பணியாற்றிய ஆப்கானியர்களை தேடிவருவதாக தாலிபான்கள் அறிவித்துள்ளது அதிர்ச்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள் அமைப்பில் பல பிரிவுகள் உள்ளன. இதில் மிக முக்கியமானது ஹக்கானி குரூப்.
ஹக்கானி குரூப் வசம்தான் காபூல் பாதுகாப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஹக்கானி நெட்வொர்க் என்கிற பெயரில் பயங்கரவாத தாக்குதல்களை இந்த குழு நடத்தி வந்தது. அமெரிக்காவால் பயங்கரவாத இயக்கமாக தடை செய்யப்பட்ட இயக்கமும் இது.

ஹக்கானியின் பின்னணி
அல்கொய்தா இயக்கத்தை உருவாக்கிய ஒசாமா பின்லேடனின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தவர் ஜலாலுதீன் ஹக்கானி. 1996-2001-ல் தாலிபான்கள் அரசாங்கத்தில் அமைச்சராகவும் இருந்தார் ஜலாலுதீன் ஹக்கானி. அவரது சகோதரர் பெயர் ஹாலி ஹக்கானி. இவரது பெயரில்தான் காலி ஹக்கானி படையணியை ஹக்கானி குழு உருவாக்கி உள்ளது.

ஆப்கானியர்களை தேடுகிறார்கள்
இந்த ஹாலி ஹக்கானி குழுவின் முக்கிய தளபதிகளில் ஒருவரான நவாஸுதீன் ஹக்கானி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அந்த பேட்டியில், கடந்த காலங்களில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினருடனும் இந்தியாவின் ரா (வெளிநாட்டு கொள்கை வகுப்பு பிரிவு) அமைப்புடனும் தொடர்பில் இருந்த ஆப்கானிஸ்தான் நாட்டவர்களை தேடி வருகிறோம். இந்த தேடுதல் நடவடிக்கையை அல் நிஷா என்ற பிரிவு மேற்கொண்டு வருகிறது என்றார்.

பாகிஸ்தான் உதவியுடன்...
ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களிலும் இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் தங்களுடன் இணைந்து பணியாற்றிய ஆப்கான் நாட்டவர் தொடர்பான விவரங்களை அமெரிக்கா வைத்திருந்தது. அந்த விவரங்கள் இப்போது தாலிபான்கள் வசம் சிக்கியுள்ளது. இந்த பட்டியலில் 7,000 பேர் விவரங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்கு தப்பி விட்டனர். எஞ்சியவர்களை அடையாளம் காண்பதில் பாகிஸ்தானும் உதவி செய்ய உள்ளதாம். இதனையும் நவாஸுதீன் ஹக்கானி தமது பேட்டியில் உறுதி செய்துள்ளார்.
Recommended Video

அடுத்தடுத்த தாக்குதல்கள்
தாலிபான்கள் பிடியில் காபூல் சிக்கியது முதலே பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள், ஆப்கான் நாட்டவர் காபூல் விமான நிலையத்தில் தஞ்சம் அடைந்து நாட்டைவிட்டு தப்பி வருகின்றனர். அமெரிக்கா படைகள் வரும் 31-ந் தேதிக்குள் தங்களது நாட்டைவிட்டு வெளியேறாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என ஏற்கனவே தாலிபான்கள் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில் காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே பயங்கரவாதிகள் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல்களை நடத்தி சுமார் 200 பேரை படுகொலை செய்தனர். அடுத்த 24-36 மணிநேரத்தில் இதேபோல் பயங்கரவாத தாக்க்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் தாலிபான்களும் தங்களது தேடுதல் நடவடிக்கை என்ற பெயரிலான நடவடிக்கையை தொடங்கி இருப்பது ஆப்கான் நிலைமை படுமோசமடைந்து வருவதையே வெளிப்படுத்துகிறது.
-
குழாய் வழி எரிவாயு இணைப்பு வைத்திருப்போருக்கு கட்டுப்பாடு! மத்திய அரசு கொடுத்த எச்சரிக்கை! -
“இந்தியா எங்கள் நண்பன்”.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களை அனுமதிக்கும் ஈரான்! ஸ்பெஷல் பவர்! -
இந்திய கப்பல்களுக்கு அனுமதி? ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி! பிரச்சனை தீருமா! -
ஜிகிரி தோஸ்த்து.. நாங்க ஹெல்ப் பண்ணுவோம்! இக்கட்டான நேரத்தில் இந்தியாவுக்கு ஈரான் உதவி! மேட்டர் ஓவர் -
வங்கதேசம் மட்டுமில்லை.. இந்தியாவிடம் கெஞ்சும் இலங்கை - மாலத்தீவு.. ஈரான் போரால் மாறிய நிலைமை -
மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்கினால்.. யாரும் பெண்களை வேலைக்கு எடுக்க மாட்டார்கள்- உச்ச நீதிமன்றம்! -
ஹார்முஸ் முடங்கினாலும் பிரச்சனை வராது.. LPG சிக்கலுக்கு உள்நாட்டிலேயே இருக்கும் தீர்வு! இது தெரியுமா -
"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா? -
உள்நாட்டிலேயே கேஸ் இல்லாத போது.. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி படுஜோர்.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்!












Click it and Unblock the Notifications