20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல்
ஹைதராபாத்: ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சிறப்பு விசாரணை குழு தனது இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேஷாச்சலம் வனப்பகுதியில் 20 தமிழர்கள், செம்மர கடத்தல் தடுப்பு அதிரடிப்படையினரால் ‘என்கவுன்டர்' என்ற பெயரால் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ந் தேதி சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களில் ஒருவரான சசிகுமாரின் மனைவி முனியம்மாள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஹைதராபாத் உயர்நீதிமன்றம், 20 தமிழர்கள் என்கவுன்டரின்போது செம்மர கடத்தல் தடுப்பு அதிரடிப்படையில் இடம் பெற்றிருந்தவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது.
பல்வேறு தரப்பிலும் நிர்ப்பந்தங்கள் வந்ததின் பேரில், 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டது. மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ரவிசங்கர் அய்யனார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அது அமைத்தது.
இந்நிலையில் இன்று சிறப்பு விசாரணை குழு தனது இறுதி விசாரணை அறிக்கையை ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆந்திர போலீசார் மீதான குற்றசாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications