வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் டெல்லியில் ஆட்சி அமைப்போம்... அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி: டெல்லியில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது தியாகம் என மக்கள் பாராட்டுவார்கள் என எதிர்பார்த்ததாகவும், மீண்டும் வாய்ப்பு அமைந்தால் டெல்லியில் போட்டியிட்டு ஆட்சி அமைப்போம் எனவும் தெரிவித்துள்ளார் முன்னாள் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்.
கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்திற்குள் டெல்லியில் ஆட்சி அமைத்தது ஆம் ஆத்மி கட்சி. ஆனால், ஒன்றரை மாதங்களிலேயே தனது டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால். இந்நிலையில் தற்போது பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசி லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறார்.
தேர்தல் பிரச்சாரம் காரணமாக வாரணாசி சென்றுள்ள கெஜ்ரிவாலை எதிர்க்கும் விதமாக நகரெங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், முதல்வர் பதவியை விட்டு பயந்து ஓடியவர் என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த கெஜ்ரிவால், இது தொடர்பாக கூறியதாவது:-

தவறான முடிவு...
டெல்லியில் பதவி விலக எடுத்த திடீர் முடிவு தவறானது. ராஜினாமா குறித்த முடிவு நான் செய்த தவறுகளில் ஒன்று என நான் நினைக்கிறேன்.

மக்கள் கருத்து...
டெல்லியில் அரசு அமைக்கும் முன் பொதுமக்களின் கருத்தை நாங்கள் கேட்டு ஆட்சியில் ஏறியது போன்று விலகும் போதும் அதே வழியை பின்பற்றி இருக்க வேண்டும்.

தொடர்பு சிக்கல் இருந்தது...
விலகும் முன்னும் பொதுமக்களின் கருத்தை நாங்கள் கேட்டு இருக்க வேண்டும். தொடர்பு சிக்கல் இருந்ததை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.பாரதீய ஜனதாவும் காங்கிரசும் இணைந்து எங்கள் அரசை செயல்படவிடாமல் தடுத்தது.

ஆன்மா உடன்படவில்லை...
மற்றவர்களை போல் நானும் முதல்வர் பதவியில் ஒட்டிக்கொண்டு இருந்திருக்க முடியும். ஆனால் எனது ஆன்மா அதற்கு உடன்படவில்லை. எனவே நான் ராஜினாமா செய்ய முடிவு செய்தேன்.

மிகப்பெரிய தியாகம்....
நாங்கள் மிகப்பெரிய தியாகம் செய்துள்ளோம். மக்கள் பாரட்டுவார்கள் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் மக்கள் அதை புரிந்து கொள்ளவில்லை. நிறையை இடங்களில் மக்கள் எங்களை பார்த்து ஏன் பதவி விலகினீர்கள் என்று கேள்வி கேட்கின்றனர்.

மீண்டும் டெல்லியில் ஆட்சி...
எனினும் ராஜினாமா செய்தது பொறுப்பற்ற செயல் என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நாங்கள் எங்கேயும் ஓடிவிடவில்லை.வாய்ப்பு வழங்கப்பட்டால் மீண்டும் டெல்லியில் போட்டியிட்டு அரசு அமைப்போம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications