திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு: சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி
திருப்பதி: திருப்பதி பிரம்மோற்சவத்தின் 9வது நாளான இன்று காலை சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியும் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் ஸ்ரீதேவி, பூதேவிதாயாருடன் மலையப்ப சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய நிகழ்வான கருடசேவை கடந்த 20ம் தேதி நடைபெற்றது.

தேரோட்டம்
21ம் தேதி மாலை தங்கத்தேரோட்டமும், புதன்கிழமை காலை மகாதேரோட்டமும் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் மாட வீதியில் திரண்டிருந்து தரிசித்தனர். சுவாமி ஊர்வலத்தின்போது பக்தர்கள், கலைஞர்கள் பல்வேறு வேடமணிந்து நடனமாடி மகிழ்ந்தனர்.

கல்கி அவதாரம்
8ம் நாளான புதன்கிழமையன்று இரவு குதிரை வாகனத்தில் கல்கி அவதாரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்தார். உற்சவர் ஏழுமலையானின் அருள்பெற மாட வீதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க தரிசனம் செய்தனர்.

தீர்த்தவாரி
பிரம்மோற்சவத்தின் 9ம் நாளான இன்று காலை வராக புஷ்கரணியில் சக்கரஸ்நானம் நடந்தது. வராக சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. இதையடுத்து கோயில் புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.

புனித நீராடல்
இதைத்தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடினர். அப்போது கோவிந்தா, கோவிந்தா என விண்ணதிர பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். இரவு 7 மணியளவில் திருச்சி விகை எனும் பல்லக்கில் ஏழுமலையான், உபநாச்சியாருடன் திருமாட வீதியில் உலா வருகிறார்.

பிரம்மோற்சவம் நிறைவு
இதனைத் தொடர்ந்து துவஜரோகனம் நடைபெற்றது. பிரம்மோற்சவம் முடிந்து விட்டதற்கு அறிகுறியாக வேத மந்திரங்கள் முழங்க கருடன் கொடி கீழிறக்கப்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டின் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவடைந்தது.

நவராத்திரி பிரம்மோற்சவம்
இந்த ஆண்டின் 2வதாக நவராத்திரி பிரம்மோற்சவம் வரும் அக்டோபர் 14ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. நவராத்திரி பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகளை திருமலை - திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாக அதிகாரி சாம்பசிவராவ் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications