மத மாற்றம் ஓயும் வரை கர்வாப்ஸி நீடிக்கும்... இப்படி சொன்னவர்தான் உபி முதல்வர் 'யோகி'
மத மாற்றம் ஓயும் வரை சிறுபான்மையினரை இந்து மதத்துக்கு திரும்ப அழைக்கும் கர்வாப்ஸி நீடிக்கும் என வெறித்தனமாக பேசிய யோகி ஆதித்யநாத்தைத்தான் பாஜக உ.பி. முதல்வராக்கியுள்ளது.
லக்னோ: மதமாற்றம் ஓயும் வரை சிறுபான்மையினரை இந்து மதத்துக்கு திரும்ப அழைக்கும் கர்வாப்ஸி நீடிக்கும் என சொன்னவர்தான் தற்போது உத்தரப்பிரதேச முதல்வராகியிருக்கும் யோகி ஆதித்யநாத்.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் 312 இடங்களில் பாஜக வென்றது. ஆனால் 312 பேரில் ஒருவரை முதல்வராக தேர்வு செய்யாமல் சர்ச்சை சாமியார் யோகி ஆதித்யநாத்த் எம்.பி.க்கு மகுடம் சூட்டியுள்ளது பாஜக.
வெறித்தனமான பேச்சுகளால் மத நல்லிணக்கத்தை கூறுபோட்டவர்தான் இந்த யோகி ஆதித்யநாத். அன்னை தெரசா, மதமாற்றத்துக்காகவே இந்தியா வந்தார் என பேசியதும் இந்த சாமியார்.
அதேபோல் மத மாற்றம் ஓயும் வரை தாய் மதத்துக்கு திரும்ப அழைக்கும் கர்வாப்ஸி நீடிக்கும் என்று பேசியவரும் இந்த யோகி ஆதித்யநாத்தான்.

கர்வாப்ஸி
அவரது முந்தைய சர்ச்சை பேச்சில் ஒன்று இது:
மத மாற்றங்கள் தேசத்தின் மத நல்லிணக்கத்தையே சீர்குலைத்துவிடும். மத மாற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும். மத மாற்றங்கள் ஓயும் வரை விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கர் வாப்ஸி நிகழ்ச்சிகள் நீண்டு கொண்டுதான் இருக்கும்.

முஸ்லிம்கள்தான்...
முஸ்லிம்கள் வாழும் பகுதியில் இருந்துதான் தேச விரோதச் செயல்கள் உருவாகின்றன. இதற்கு மதச் சார்பற்றவர்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்களே பதிலளிக்க வேண்டும்.

இந்துக்கள் பாதுகாப்பு
இந்து சமுதாயத்தில், இந்துக்கள் அனைவரும் பாதுகாப்பாக உணர்கின்றனர். ஒவ்வொரு தாயும், சகோதரியும் பாதுகாப்பு உணர்வுடன் உள்ளனர். இதேபோல், ஒவ்வொரு மதத்துக்கும் அதற்கான சுதந்திரம் இருக்கிறது.

முஸ்லிம்களிடம் அச்சம் ஏன்?
அப்படி இருக்கும்போது, முஸ்லிம் மக்கள் மத்தியில் மட்டும் ஏன் அச்ச உணர்வு ஏற்படுகிறது? ஏன் தேச விரோதச் செயல்கள் அங்கிருந்து உருவாகின்றன. இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் துக்கம் அனுசரிப்பதும் தோல்வியுற்றால் பட்டாசு வெடித்தும் ஏன் கொண்டாடுகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications