"மெடிக்கல் மிராக்கல்".. மண்ணுக்குள் கிடைத்த 31,000 வருடம் பழைய எலும்பு கூடு! எடுத்து பார்த்தால்.. அச்சச்சோ
போர்னியோ: தெற்கு ஆசியாவில் உள்ள போர்னியோ என்ற தீவில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்பு கூடு ஒன்று ஆராய்ச்சியாளர்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
போர்னியா தீவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த எலும்பு கூடு 31 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். இந்த எலும்பு கூடு பல்வேறு காரணங்களுக்காக ஆராய்ச்சியாளர்கள் இடையே கவனம் பெற்றுள்ளது.
இந்த எலும்பு கூடு 2020ல் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு இருக்கும் லியோன் டேபா என்ற குகையில் இந்த எலும்பு கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

எலும்பு
அதோடு அந்த குகையில் 40 ஆயிரம் வருடம் பழமையான ஓவியங்களும் கூட கண்டுபிடிக்கப்பட்டன. இந்த எலும்பு கூடு கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் சுற்றி சுற்றி பல பறவை எச்சங்கள், மற்ற விலங்குகளின் எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு பல அரியவகை பூச்சிகளும் கூட இங்கு கண்டுபிடிக்கப்பட்டன. எதிர்பார்த்ததை விட இந்த எலும்பு கூட மிக சிறப்பாக பதப்படுத்தப்பட்டு இருந்துள்ளது.

ஆபரேஷன்
இதில் கவனிக்க வேண்டிய விஷயமே, இந்த எலும்பு கூட்டில் இடது கால் மற்றும் வலது கால் பாதம் நீக்கப்பட்டு இருந்தது. இது வெட்டப்படாமல் சுத்தமாக நீக்கப்பட்டு உள்ளது. அதாவது ஒரு நபருக்கு மருந்து கொடுத்து, காலை முறையாக திட்டமிட்டு நீக்கினால் எப்படி மற்ற எலும்புகள் பாதிக்காமல் நீக்கப்படுமோ அப்படி நீக்கப்பட்டு இருக்கிறது. இத அர்த்தம் முறையாக மெடிக்கல் முறைப்படி இந்த எலும்பை நீக்கி இருக்கிறார்கள். அதாவது மருத்துவ முறைப்படி காலை நீக்கி உள்ளனர்.

பிரான்ஸ்
இதற்கு முன்பாக பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்பு கூடு ஒன்றில் இதேபோல் கால்கள் நீக்கப்பட்டு இருந்தது. அதிலும் மருத்துவ முறைப்படி கால்கள் நீக்கப்பட்டு இருந்தன. அது 7000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருந்தது. இப்போது 31 ஆயிரம் வருடம் பழமையான எலும்பு கூடு ஒன்றில் கால்கள் நீக்கப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுதான் உலகிலேயே மருத்துவ ரீதியாக உடல் உறுப்பு நீக்கப்பட்ட மிக பழைய எலும்பு கூடு ஆகும்.

பழமையானது
இதன் மூலம் 31 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவர்களுக்கு மருத்துவ அறிவு இருந்தது நிரூபணம் ஆகி உள்ளது. போரிலோ, அல்லது வேறு ஒருவர் தாக்கியோ இருந்தால் இப்படி எலும்பு முறிந்து இருக்காது. இந்த எலும்பு முறிவு கண்டிப்பாக அது மருத்துவ முறைப்படிதான் செய்யப்பட்டு இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்த எலும்பிற்கு சொந்தக்காரர் 20 வயது கொண்டவராக இருக்கலாம் என்று அதில் செய்யப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆபரேஷன்
இந்த ஆபரேஷனுக்கு பின்பு அந்த நபர் 6-9 வருடங்கள் உயிரோடு இருந்துள்ளார். ஏனென்றால் அந்த எலும்புகள் லேசாக வளர்ந்து உள்ளன. இதனால் இவருக்கு அந்த ஆப்ரேஷன் 14-16 வயதில் செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆப்ரேஷன் செய்யப்பட்ட பின்பும் அவர் உயிரோடு இருந்துள்ளார். இதன் அர்த்தம் அந்த ஆப்ரேஷன் சிறப்பாக செய்யப்பட்டு இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 31 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்களுக்கு ஆபரேஷன் செய்யப்பட்ட இந்த சம்பவம் ஆராய்ச்சியாளர்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications