"மைனஸ் 34 டிகிரி.." எலும்பை உறைய வைக்கும் குளிர்.. துடிக்கும் குழந்தைகள்.. ஆப்கனில் 162 பேர் பலி!
ஆப்கானிஸ்தானில் 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் பனி, குளிர் நிலவி வருகிறது. இதனால் 162 பேர் பலியாகி உள்ள நிலையில் உதவிகள் இன்றி மக்கள் கதறி வருகின்றனர்.
காபூல்: ஆப்கானிஸ்தானில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் உடலையே உறைய வைக்கும் அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதோடு கடும் குளிர் நிலவி வருகிறது. மைனஸ் 34 டிகிரி வரை வெப்பநிலை குறைவதால் குழந்தைகள் உள்பட அனைத்து வயதினரும் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். உணவு, குடிநீர் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் கடும் குளிரால் 162 பேர் பலியாகி உள்ளனர். குளிர்காயகூட வசதி இல்லாத நிலையில் கடந்த 17 நாட்களில் நிலைமை மோசமாகி வருவதால் மக்கள் கதறி வருகின்றனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தான் தற்போது தாலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 2021ல் அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் உள்நாட்டு போரை தொடங்கி ஒட்டுமொத்த நாட்டையும் தாலிபான்கள் கைப்பற்றி உள்ளன.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடந்தாலும் கூட அதனை பல உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. இதனால் ஆப்கானிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் இருப்பதோடு மக்களின் வாழ்வாதாரமும் மோசமான நிலையில் உள்ளது.

குளிர்காலம்
இது ஒருபுறம் இருக்க தாலிபான்கள் கட்டுப்பாடுகள் என்ற பெயரில் பெண்களை வீட்டில் முடக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்கள் பணி செய்யவும், கல்வி கற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பிற்போக்குத்தனமான கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்து வருவதால் தான் அவர்களை உலக நாடுகள் அங்கீகரிக்காமல் வைத்துள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டில் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ள நிலையில் அங்கு தற்போது குளிர்காலம் துவங்கி உள்ளது.

மைனஸ் 34 டிகிரி
இந்நிலையில் தான் தற்போது ஆப்கானிஸ்தானில் கடும் பனி மற்றும் குளிர் நிலவி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஆப்கானிஸ்தானில் குளிர் நிலவி வருகிறது. மேலும் பனிப்பொழிவும் வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. பல இடங்களில் வெப்ப நிலை மைனஸ் 34 டிகிரியை (-29.2 டிகிரி பாரன்ஹீட்) தொட்டுள்ளது. இதனால் உடலை உறைய வைக்கும் அளவில் பனி, குளிர் ஒருசேர மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

162 பேர் பலி
தற்போதைய நிலவரப்படி ஆப்கானிஸ்தானில் கடும் பனியால் 162 பேர் பலியாகியுள்ளனர். மேலும் வீடுகளை கதகதப்பாக்க வைத்து கொள்வதற்கு தேவையான எரிபொருள் வாங்கவும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். சிலர் பகல் நேரத்தில் ஆங்காங்கே கிடக்கும் குப்பைகளை சேகரித்து தீமூட்டி இரவில் சிறிதுநேரம் குளிர்காய்கின்றனர். உணவு, குடிநீர் இன்றி ஏராளமான மக்கள் தவித்து வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் குளிரில் உடல் நடுங்குவது பரிதாபமாக உள்ளது.

17 நாளில் மோசமான நிலைமை
ஆப்கானிஸ்தானில் தற்போது தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல தொண்டு நிறுவனங்கள் செயல்படாமல் உள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளும் கிடைக்காத சூழல் உள்ளது. இதுபற்றி பேரிடர் மேலாண் துறையின் செய்தி தொடர்பாளர் ஷபியுல்லா ரஹ்மி கூறுகையில், ‛ஜனவரி 10ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை வெறும் 17 நாளில் 162 பேர் பலியாகி உள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 84 பேர் இறந்தனர்'' என தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications