ஐஎஸ்ஐஎஸ் தலைவர் தன்னைத் தானே கலிபா என்று அறிவித்தது சட்டவிரோதமானது: அல் கொய்தா
ரக்கா: ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி தன்னை கலிபாவாக அறிவித்தது சட்டவிரோதமானது என்று அல் கொய்தா அமைப்பின் சிரியா பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி தன்னைத் தானே கலிபாவாக அறிவித்துக் கொண்டார். இந்நிலையில் இது குறித்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிரி அமைப்பான அல் கொய்தாவின் சிரியா பிரிவு தலைவரும், அல் நுஸ்ரா முன்னணியின் தலைவருமான அபு முகமது அல் ஜொலானி கூறுகையில்,

அவர்கள் கலிபாவை அறிவித்துள்ளனர். ஆனால் அது சட்டவிரோதமானது என்று அறிஞர்கள் அதை ஏற்க மறுத்துள்ளனர். அந்த அறிவிப்பு இஸ்லாமிய சட்டத்தின்படி வெளியிடவில்லை. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் அல் நுஸ்ரா அமைப்பைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்டவர்களை கொன்றுள்ளனர். அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளையும் கொலை செய்துள்ளனர்.
அவர்களுக்கும், எங்களுக்கும் இடையே உள்ள பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுவதற்கான அறிகுறிகள் இல்லை. அவர்கள் தாங்கள் செய்த குற்றங்களுக்காக வருந்தி சன்னி மக்களிடம் திரும்பி வருவார்கள் என்று நம்புகிறோம். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் இஸ்லாத்தின் பாதையில் இருந்து விலகிச் சென்றுள்ளனர்.
சந்தைகளுக்கு குண்டு வைப்பது மற்றும் மசூதிகளில் வைத்து மக்களை கொல்வது இல்லை என்ற எங்களின் கொள்கை அவர்களுக்கு இல்லை. அல் நுஸ்ரா அல் கொய்தாவை விட்டு வெளியேறுவது பற்றி பேச்சு இல்லை. அல் நுஸ்ரா அமைப்பில் உள்ளவர்களில் 30 சதவீதம் பேர் வெளிநாட்டவர்கள். எங்கள் அமைப்பில் சில அமெரிக்கர்களும் உள்ளனர் என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications