ஐநா சபை முன் அமெரிக்கத் தமிழர்கள்... அனிதாவுக்காக 4வது வாரமாகப் போராட்டம்!
நியூயார்க் (யு.எஸ்): அனிதாவுக்கு நீதி கேட்டு அமெரிக்கத் தமிழர்களின் போராட்டம் தொடந்து கொண்டிருக்கிறது. வரும் சனிக்கிழமை காலை 11 மணி முதல் 12 மணி வரை நியூயார்க் நகரத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமை அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்த உள்ளார்கள்.
அங்கு கூடுவதற்கான முன் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. நியூயார்க் நகரின் முதல், இரண்டாவது அவென்யுகளுக்கு இடையே 47வது தெருவில் அமைந்துள்ள ஐநா பூங்காவில் இந்த போராட்டம் நடைபெற உள்ளது..

அனைவரும் கருப்புச் சட்டை அணிந்து வருமாறு, ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நியூயார்க், கனெக்டிகட், நியூஜெர்ஸி, டெலவர் மாநிலங்களிலிருந்து தமிழர்கள் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நியூயார்க், அட்லாண்டா, சிகாகோ, சான் ஃப்ரான்சிஸ்கோ மற்றும் வாஷிங்டன் டிசியில் உள்ள இந்திய தூதரக மற்றும் துணைத்தூதரக அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெற்றது.
அனிதாவுக்கு நீதி, நீட் தேர்வுக்குத் தடை, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு திரும்பப் பெறுதல், நீட் தொடர்பான தமிழக அரசின் மசோதாக்களுக்கு மத்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மனுவில் கையெழுத்துக்கள் பெறப்பட்டன.
சான் ஃப்ரான்சிஸ்கோ துணைத்தூதரக அதிகாரியிடம் மனு வழங்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் டிசி தூதரகத்தில் மனு வழங்க, இன்று வெள்ளிக்கிழமை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற துணைத் தூதரகங்களில் சந்திப்புக்கு நேரம் கேட்டு கோரிக்கை விடப்பட்டுள்ளது. அனுமதிக்கு காத்திருக்கிறார்கள்.
இந் நிலையில், சனிக்கிழமை ஐநா சபை முன்பாக தமிழர்கள் ஒன்று கூடி அனிதாவுக்கு நீதி கேட்டு கோரிக்கையை வலியுறுத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.
'வெளிநாடு வாழ் இந்தியப் பிரதமர்' என்று அழைக்கப்படும் பிரதமர் மோடிக்கு, இத்தகைய போராட்டங்கள் அழுத்தம் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
-இர தினகர்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications