கனடா வளர்ச்சிக்கு தமிழர்களின் பங்களிப்பு... பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பெருமிதம்!
டொரான்டோ(கனடா): கனடியன் தமிழ் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற மூன்றாவது தமிழ் தெருவிழாவில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டு தமிழர்களின் பங்களிப்பை பாராட்டினார்.
மூன்றாவது தமிழ் தெருவிழா, டொரான்டோ நகரில் சனி, ஞாயிறு என இரண்டு நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.உள்ளூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த பல்வேறு இசை, நடனக் குழுக்கள் வருகை தந்திருந்தனர். பாரம்பரிய மற்றும் நவீன இசை நடனங்கள் மற்றும் ஃப்யூசன் என வெவ்வேறு விதமான நிகழ்ச்சிகள் இடம்பெற்றது. தெருவெங்கும் இருந்த பலதரப்பட்ட உணவங்கள் தெருவிழாவின் முக்கிய அம்சமாகும்.

டொரான்டோ மேயர் ஜான் டோரி விழாவை தொடங்கி வைத்தார். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
பிரதமர் பேசும் போது, "1980 களின் தொடக்கத்தில்தான் தமிழர்கள் கனடாவுக்கு முதல் முதலாக வந்தார்கள். மிகக் குறுகிய காலத்திலேயே அவர்கள் கனடாவின் பல் இன சமூகத்தில் முக்கிய அங்கம் வகித்து, நாட்டின் வளர்ச்சிக்கு பெருமளவில் பங்காற்றியுள்ளார்கள்," என்று குறிப்பிட்டார். ஜனவரி மாதத்தை 'தமிழ் மரபுத் திங்கள்' என்று கனடா அரசு சிறப்பித்துள்ளதையும் நினைவு கூர்ந்தார்.

இலங்கையிலிருந்து வந்த தமிழர்கள் அகதியாக வந்து இறங்கிய படகு ஒன்று பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்த படகில் ஏறி பார்வையிட்டார். அங்கே கூடியிருந்த தமிழர்கள் உணர்ச்சிமயமாகி விட்டார்கள்.
விழாவில் வரவேற்புரை ஆற்றிய கனடியன் காங்கிரஸ் தலைவர் டாக்டர் சாந்தகுமார், தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் உணவுகளின் சிறப்பை வெளிப்படுத்தும் விதமாக 'தமிழ் தெருவிழா' நடைபெறுவதாக குறிப்பிட்டார்.

விழாவில் தமிழர்கள் மட்டுமல்லாமல், பெருவாரியாக கனடியர்களும் பங்கேற்றார்கள். டொரோன்டா மட்டுமல்லாமல் கனடா முழுவதிலுருந்தும் மக்கள் பங்கேற்கும் வகையில் 'தமிழ் தெருவிழா' முக்கிய விழாவாக உருவெடுத்துள்ளது.
- இர தினகர்
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications