திபெத்திலும் ஆயுதங்களை குவிக்கிறது சீனா... திடுக் தகவல்கள்
திபெத் பகுதியை நோக்கி சீன ராணுவத்தின் கனரக போர் ஆயுதங்களுடன் சீன படைகள் செல்வதாக அந்நாட்டு ஊடகம் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
பெய்ஜிங்: திபெத்தை நோக்கி சீன ராணுவம், கனரக போர் ஆயுதங்களுடன் படிப்படியாக நகர்கிறது என அந்நாட்டு ராணுவ ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிக்கிம் எல்லை அருகே இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பான டோக்லாம் பீடபூமியில் சீனாவின் ராணுவ வீரர்கள் மேற்கொண்ட சாலைப்பணிகளை இந்திய ராணுவம் தடுத்தது. இதனால் இருதரப்பு வீரர்கள் மத்தியிலும் வாக்குவாதம் ஏற்பட்டு, போர் பதற்றம் வரை கொண்டுவந்து விட்டுள்ளது.

வடகிழக்கு பகுதிகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது என்று இந்திய விளக்கமும் அளித்திருந்தது.
சிக்கிம் எல்லையில் இரு நாடுகளும் போட்டிபோட்டுக்கொண்டு படைகளை குவித்து உள்ளன. இந்தியா தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் , இல்லாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என சீனா அடிக்கடி மிரட்டி வருகிறது.
ஆனால் ராணுவத்தை திரும்ப பெற முடியாது, அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்த்துக் கொள்ள தயாராக இருக்கிறோம் என இந்தியாவும் கூறிவிட்டது. இந்நிலையில் சீன ராணுவம் எல்லையை நோக்கி நகர்கிறது எனவும் கனரக போர் ஆயுதங்கள் திபெத் பகுதிக்கு செல்கிறது எனவும் சீன ராணுவ ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.
இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள 'சவுத் சீனா மார்னிங் போஸ்ட்' , " இந்தியாவுடனான எல்லையை கையாளும் சீனப் படைப்பிரிவின் கமாண்டோவின் உத்தரவின்படி , வடக்கு திபெத்தின் குன்லுன் மலைப்பகுதியை நோக்கி ராணுவப்படைகள் செல்கிறது" என பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஊடகம் ஹாங்காங்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் ராணுவ செய்தித் தொடர்பாளர் நி லிசியாங் கூறுகையில், " சீன ராணுவ தளவாடங்கள் குவிக்கும் அளவுக்கு திபெத்தில் சரியான இடம் கிடைத்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications