கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை.. அமெரிக்காவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த சீனா!
பெய்ஜிங்: ஈரானின் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டிருக்கிறது. இதன் காரணமாக, ஹர்முஸ் நீரிணை மொத்தமாக மூடப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை கொஞ்சம் கூட பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது என்று சீனா கண்டனம் தெரிவித்திருக்கிறது.
வேலியில் போகிற ஓணானை வேட்டியில் விட்ட கதைதான், அமெரிக்கா-ஈரான் போர். இந்த போரை நிறுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய நிலையில், இஸ்லாமாபாத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில், தற்போது அமெரிக்கா எடுத்துள்ள நடவடிக்கை மொத்த உலகத்திற்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

அமெரிக்காவின் நடவடிக்கை
பேச்சுவார்த்தைதான் சொதப்பிவிட்டதே, அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையை நடந்த என்ன செய்வது என்று யோசிக்காமல், ஈரானின் துறைமுகங்களை முடக்கியிருக்கிறது அமெரிக்கா. ஹார்முஸ் நீரிணைக்குள் வரும் கப்பல்களையும், வெளியே செல்லும் கப்பல்களையும் தாக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. இந்த நீரிணை வழியாகத்தான், சர்வதேச அளவில் 20% கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறுகிறது. தற்போது டிரம்பின் அச்சுறுத்தல் காரணமாக, இந்த போக்குவாரத்து மொத்தமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.
சீனாவின் கண்டனம்
இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவின் செயல் ஆபத்தானது மற்றும் பொறுப்பற்றது என்று கடுமையாக விமர்சித்துள்ளது. மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டுவதில் சீனா தொடர்ந்து செயல்படும் என்றும் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் உறுதியளித்தார்.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் இது பற்றி பேசுகையில், "அமெரிக்காவின் இந்த இராணுவ நடவடிக்கையும், அதன் முற்றுகையும் பதட்டங்களை மேலும் அதிகரிக்கும். இது போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு அச்சுறுத்தலாகவும், ஹர்முஸ் நீரிணையின் பாதுகாப்பிற்கு ஆபத்தாகவும் அமையும். இது ஒரு ஆபத்தான, பொறுப்பற்ற செயல்" என்று கூறியிருக்கிறார்.
சீனா மீது அழுத்தம்
இதற்கிடையில், உலக வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. சீனா போன்ற நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே அங்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் நடைபெறும் எண்ணெய் போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த வழியாகவே நடைபெறுகிறது. ஆய்வாளர்களின் கருத்துப்படி, டிரம்பின் இந்த நடவடிக்கை ஈரானை நிதி ரீதியாக பலவீனப்படுத்தி, ஜலசந்தியை மீண்டும் திறக்க சீனா மீது அழுத்தம் கொடுக்கக்கூடும்.
கறார் காட்டிய சீனா
இந்த போர் குறித்து முதன்முறையாகப் பேசிய ஜி ஜின்பிங், மத்திய கிழக்கு நாடுகளின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். பெய்ஜிங்கில் வைத்து அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்த ஜி ஜின்பிங், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் சீனா தொடர்ந்து ஆக்கபூர்வமான பங்கை வகிக்கும் என உறுதி அளித்தார்.
அதேபோல, ஈரானுக்கு ஆயுதங்களை கொடுப்பதாக சீனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டை வைத்திருந்தது. இதை மறுத்த சீனா, இப்படியான புகார்கள் ஆதாரம் இல்லாதது என்றும் கூறியிருக்கிறார். இதை சாக்காக சொல்லிக்கொண்டு எங்கள் மீது வரியை போட்டால், பதிலுக்கு நாங்களும் வரி போடுவோம் என்று கறார் காட்டியிருக்கிறார்.
-
அமெரிக்கா - ஈரான் மோதலால் இந்தியாவுக்கு 7 பெரும் சவால்கள்! அபாய மணியடிக்கும் வளைகுடா -
இஸ்ரேல் மிரட்டல்.. அமெரிக்காவின் 3 மணிநேர கெடு.. உச்சக்கட்ட பரபரப்பில் ஈரான்..! -
டிரம்ப்பிற்கு பதிலடி கொடுக்க வரும் புதின்? அமெரிக்காவுக்கு ‘செக்’ வைத்த ரஷ்யா! உலக போர் ஆபத்து? -
வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது.. கச்சா எண்ணெய் விலை தடாலடி உயர்வு.. மீண்டும் 120 டாலரா? -
கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை டெஸ்ட் செய்த வடகொரியா.. அமெரிக்காவுக்கு ஷாக்! மாறும் போர் களம்! -
ஈரான் ஈரக்குலையை நடுங்க வைக்கும் அறிவிப்பு.. டீல் பேசும் ட்ரம்ப்! நடு கடலில் தத்தளிக்கும் கப்பல்கள்! -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
அதிபர் பதவியை இழக்கும் டிரம்ப்? களத்தில் இறங்கிய அந்த 70 பேர் + மாஜி அமெரிக்க உளவு துறை தலைவர்! -
ஈரான் மேட்டரில் நட்டாற்றில் விடப்பட்ட டிரம்ப்.. கழன்று கொண்ட பிரிட்டன்! கடைசியில் இப்படி ஆயிடுச்சே! -
ஹார்முஸ் ஜலசந்தியில்.. அமெரிக்கப் படை முற்றுகை.. ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு.. உலகளவில் பதற்றம்! -
"5 vs 20.." விட்டு கொடுக்காத ஈரான்.. விடாப்பிடியாக இழுக்கும் அமெரிக்கா.. அடுத்து என்ன நடக்கும்? -
ஈரான் பிடிவாதம்.. விடாமல் காய் நகர்த்திய டிரம்ப்.. உலகையே உலுக்கிய அந்த 20 மணி நேரம்.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications