ரூ.8.46 கோடி லஞ்சம் பெற்ற ஐ.நா. பொதுச்சபை முன்னாள் தலைவர் கைது: பொதுச் செயலாளர் பான் கி-மூன் அதிர்ச்
நியூயார்க்: ஐ.நா. சபை முன்னாள் தலைவர் ஜான் ஆஷ், சீன தொழிலதிபர் ஒருவரிடம் 13 லட்சம் அமெரிக்க டாலர் (8.46 கோடி) லஞ்சம் வாங்கியுள்ள குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜான் ஆஷ் லஞ்ச குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி-மூன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பரிலிருந்து 2014 வரை ஐ.நா. பொதுச் சபை தலைவராக ஜான் ஆஷ் பதவி வகித்தார். அதற்கு முன்னதாக ஆன்டிகுவா மற்றும் பார்படாவின் ஐ.நா.வுக்கான நிரந்தர பிரதிநிதியாக இருந்தார்.

கடந்த 2011ம் ஆண்டு முதலாகவே ஐ.நா.வில் சில காரியங்களைச் சாதிக்க தொழிலதிபர்களிடமிருந்து லஞ்சம் வாங்கியுள்ளார். ஆன்டிகுவாவில் இருந்த ஐ.நா. அதிகாரிகள், அரசு அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்து சில பணிகளை தொழிலதிபர்களுக்குச் சாதகமாக முடித்துக் கொடுத்துள்ளார் என்பது ஆஷ். மீதான குற்றச்சாட்டு.
பல கோடி லஞ்சம்
மேலும், ஐ.நா.சபை தலைவராக இருந்தபோது சீனாவின் மகாவு பகுதியில் ஐ.நா. நிதியுதவியில் கருத்தரங்கு மையம் கட்டுவதற்கு, என்ஜி லாப் செங் என்னும் தொழிலதி பருக்கு ஆதரவாகச் செயல்பட்டு அவரிடமிருந்து 5 லட்சம் அமெரிக்க டாலர்களை லஞ்சமாகப் பெற்றுள்ளார் ஆஷ். இதுபோன்று ஆஷ் சுமார் 13 லட்சம் அமெரிக்க டாலர்கள் லஞ்சமாக வாங்கியுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, நியூயார்க்கில் உள்ள அவரது வீட்டில் ஆஷ் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
5 பேர் கைது
அமெரிக்க அட்டர்னி பிரீத் பராரா அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தியதைத் தொடர்ந்து ஆஷ் மற்றும் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐ.நா.வுக்கான டொமினிக் குடியரசு துணை தூதர் பிரான்சி லோரன்ஸே, என்ஜி லாப் செங், ஜெஃப் யின், சுவேய் யான், ஹெய்தி ஹாங் பியாவோ ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பான் கி - மூன் அதிர்ச்சி
ஐ.நா. அமைப்பில் தலைவராக பதவி வகித்த ஒருவர் லஞ்ச குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி-மூன் தெரிவித்துள்ளார்.
பான் கி-மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறும்போது, "ஆஷ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அறிந்த போது, மூன் அதிர்ச்சியடைந்தார். மிகுந்த மனவருத்தம் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
ஒத்துழைப்பு தருவோம்
இந்த செயல் ஐ.நா.வின் இறையாண்மையின் மையத்தையை அசைத்துவிட்டது. அவர் கைது செய்யப்பட்டது ஊடகங்கள் வாயிலாகத்தான் எங்களுக்கும் தெரியும். அமெரிக்க அதிகாரிகள் இதுதொடர்பாக முன்கூட்டி எதுவும் தெரிவிக்கவில்லை. அதிகாரிகள் எங்களைத் தொடர்பு கொண்டால் உரிய வகையில் ஒத்துழைப்பு அளிப்போம்" என்றும் கூறியுள்ளார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications