முதலில் இந்தியா.. இப்போது ஆப்கான்.. பாகிஸ்தான் பேண்டை உருவிய தாலிபான்கள்! இது எவ்வளவு பெரிய அசிங்கம்
இஸ்லாமாபாத்: பாதுகாப்புத் துறையில் பாகிஸ்தான் இந்தாண்டு மிக மோசமான தோல்விகளைச் சந்தித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இந்தியாவிடம் அடி வாங்கிய பாகிஸ்தான் இப்போது தாலிபான்களிடமும் அடி வாங்கி போர் நிறுத்தம் செய்யக் கோரிக்கை விடுத்துள்ளது. எல்லா இடங்களிலும் சுற்றிச் சுற்றி அடிவாங்கும் அளவுக்கே பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை இருக்கிறது.
நமது அண்டை நாடான பாகிஸ்தான் எப்போதும் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு நாடு. இதன் காரணமாகவே ஒரே நாளில் இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்றாலும் இந்தியா அடைந்த வளர்ச்சியைப் பாகிஸ்தானால் அடைய முடியவில்லை. பொருளாதார ரீதியாகத் திணறும் பாகிஸ்தான், பல உலக நாடுகளிடம் கடன் வாங்கி மோசமான நிலையில் இருக்கிறது.

பாகிஸ்தான் ராணுவம்
இந்தாண்டு பாதுகாப்புத் துறையிலும் பாகிஸ்தான் எந்தளவுக்குப் பலவீனமாக இருக்கிறது என்பதும் உலகிற்குத் தெரிந்துவிட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவை அத்துமீறி பாகிஸ்தான் தாக்க முயன்றது. அதாவது பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா நடத்திய தாக்குதலில் 100+ தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்திய ராணுவத்தின் வெற்றியைப் பொறுத்துக் கொள்ளாத பாகிஸ்தான், அத்துமீற முயன்றது. ஆனால், இந்திய பாதுகாப்புப் படைகள் அந்த தாக்குதல்களைத் துல்லியமாக முறியடித்தது. மறுபுறம் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதலை ஆரம்பித்தது. பல முக்கிய இடங்களைத் தாக்கியது. குறிப்பாகப் பாகிஸ்தான் ராணுவ தளமான ராவல்பிண்டி ராணுவ முகாமை கூட இந்தியா தாக்கியது. ஆனால், பாகிஸ்தானால் எதையும் தடுக்க முடியவில்லை.
பொய் தகவல்
இதனால் வேறு வழியே இல்லாமல் பாகிஸ்தான் சரணடைய இந்தியாவிடம் கோரிக்கை வைத்தது. அதை இந்தியாவும் ஏற்கப் பாகிஸ்தான் தப்பியது. ஆனால், சொந்த மக்களிடம் தாங்கள் தான் போரில் வென்றோம் என்பது போலப் பாகிஸ்தான் பொய் தகவல்களைப் பரப்பி வந்தது. அந்நாட்டின் ராணுவ தளபதியான அசீம் முனீருக்கு பீல்ட் ஏர் மார்ஷல் பதவியும் தரப்பட்டது.
ஆப்கானிஸ்தான்
இப்படிப் பல விஷயங்களைச் செய்து, தனது சொந்த நாட்டு மக்களைப் பாகிஸ்தான் ஏமாற்ற முயன்றது. ஆனால், இப்போது ஆப்கானிஸ்தானுடன் வெடித்த மோதலில் பாகிஸ்தான் பலம் அம்பலப்பட்டுவிட்டது. பாகிஸ்தானில் உள்ள ஷெரீப் அரசுக்கு பாகிஸ்தான் தாலிபான் (சுருக்கமாக டிடிபி) தலைவலியாக மாறியுள்ளது. டிடிபி தீவிரவாதிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தாக்குதல் நடத்தியது. அதற்கு ஆப்கானிஸ்தானும் பதிலடி கொடுக்கவே நிலைமை மோசமானது.
கடந்த சில நாட்களில் மட்டும் தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் சுமார் 58 பாகிஸ்தான் ராணுவ படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 20 பாகிஸ்தான் செக்யூரிட்டி போஸ்ட்கள் அழிக்கப்பட்டுள்ளன. நிலைமை இந்தளவுக்கு மோசமானதால் பாகிஸ்தான் போர் நிறுத்தம் கோரியதாகவும் அதன்படி தாக்குதலை நிறுத்துவதாகவும் தாலிபான்கள் அறிவித்துள்ளன. இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் பேண்ட்டை உருவி அதை வைத்து தாலிபான்கள் ஊர்வலமும் நடத்தியுள்ளன. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
ரொம்ப பலவீனம்
பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை எந்தளவுக்குப் பலவீனமாக இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி.. தாலிபான்களைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் தவிக்கிறது. தாலிபான் மட்டுமின்றி பாகிஸ்தானில் பலூச் போராளிகளையும் கூட அழிக்க முடியாமல் பாகிஸ்தான் திணறுகிறது. இது அந்நாட்டின் ராணுவ பலத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications