சிரியா வீழ்ந்தால் ஐ.எஸ். விஸ்வரூபமெடுக்கும்... ஐரோப்பாவுக்கு பேராபத்து: எச்சரிக்கும் 'கடாபி' வாரிசு
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ: சிரியாவில் அதிபர் ஆசாத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டால் ஐ.எஸ். தீவிரவாதிகள் விஸ்வரூபமெடுப்பர்; அது ஐரோப்பியாவில் அரபு வசந்தம் உருவாக... ஐ.எஸ். தீவிரவாதிகள் நாசகார தாக்குதல்களை நடத்த வழிவகுத்து விடும் என்று லிபியாவின் சர்வாதிகாரியாக இருந்து கொல்லப்பட்ட கடாபியின் உறவினரும் தம்மை கடாபி வாரிசாக கூறிக் கொள்பவருமான அகமது கடாபி அல் தாம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லிபியாவுக்கான முன்னாள் உளவுத்துறை அதிகாரியாகவும் பணியாற்றிய அகமது கடாபி அல் தாம், ரஷ்யா ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறப்பட்டுள்ள முக்கிய தகவல்கள்

அவரது பேட்டியின் முக்கிய அம்சங்கள்:
- சிரியாவில் அதிபர் ஆசாத் அரசு நிலைத்திருக்க வேண்டும் என்று ரஷ்யா கருதுகிறது.
- ரஷ்யாவின் இந்த நிலையை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குல நாடுகள் பின்பற்ற வேண்டும்.
- ரஷ்யாவின் நிலையை பின்பற்றாமல் போனால் அடுத்த 5 ஆண்டுகளில் உள்நாட்டுப் போரால் சிரியா நாசமாகிவிடும்.
- சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கை ஓங்கிவிட்டால் அவர்களது அடுத்த இலக்கு எண்ணெய் வளம் மிகுத அரேபிய வளைகுடாவாகத்தான் இருக்கும்.
- சூயஸ் கால்வாயில் எண்ணெய் போக்குவரத்து தடுக்கப்பட்டால் ஒரு பேரல் விலை 200 டாலராக உயரும்.
- இது மத்திய தரைக்கடல் நாடுகளில் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தும்.
- ஐரோப்பிய நாடுகளிலும் 'அரபு வசந்தம்' எதிரொலிக்கும் நிலைமை உருவாகும்.
- செளதியின் புனித தலமான மெக்காவை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினால் பிலிப்பைன்ஸில் இருந்து மொராக்கோ வரையில் முஸ்லிம்கள் மனங்களில் கடும் தாக்கம் உருவாகும்.
- ஐரோப்பியாவுக்குள் அகதிகளாக தற்கொலைப்படை தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர்.
- ஐரோப்பாவில் நாசகார விஷவாயுக்களையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்திச் சென்றிருக்கக் கூடும்.
- லிபியாவிலும் ஈராக்கிலும் முந்தைய அரசுகள் நீடித்திருந்தால் ஐ.எஸ். தீவிரவாதிகள் விஸ்வரூபமெடுக்க வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications