சர்வதேச பயணத்துக்கான அனுமதியை கொரோனா தடுப்பூசிகள் அடிப்படையில் வழங்க கூடாது: அமைச்சர் ஜெய்சங்கர்
மாஸ்கோ: சர்வதேச பயணங்களுக்கான அனுமதியை கொரோனா பரிசோதனைகள் அடிப்படையில்தான் மேற்கொள்ள வேண்டுமே தவிர கொரோனா தடுப்பூசிகள் அடிப்படையில் செய்ய கூடாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தி உள்ளார்.

மாஸ்கோவில் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கோ லாவ்ரோவை ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:
சர்வதேச பயணங்களை மேற்கொள்ளும் போது கொரோனா பரிசோதனைகள் நடத்தி அதனடிப்படையில் அனுமதிப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும். தற்போது சில நாடுகள் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி என்கிறது.
இது குறித்து சில புரிதல்கள் ஏற்பட வேண்டியது உள்ளது. இது தொடர்பாக ரஷ்யா வெளியுறவு அமைச்சருடன் ஆலோசித்தேன். சர்வதேச பயணங்களுக்கான அனுமதியை கொரோனா தடுப்பூசி அடிப்படையில் முடிவெடுக்க கூடாது.
கொரோனா பாதிப்பில் இருந்து ரஷ்யாவும் இந்தியாவும் தங்கள் நாட்டு மக்களை பாதுகாத்து உலக நாடுகளுக்கும் உதவுகின்றன. சர்வதேச பயண அனுமதி தொடர்பாக உலக நாடுகள் தெளிவான முடிவை எடுக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.












Click it and Unblock the Notifications