சர்வதேச பயணத்துக்கான அனுமதியை கொரோனா தடுப்பூசிகள் அடிப்படையில் வழங்க கூடாது: அமைச்சர் ஜெய்சங்கர்
மாஸ்கோ: சர்வதேச பயணங்களுக்கான அனுமதியை கொரோனா பரிசோதனைகள் அடிப்படையில்தான் மேற்கொள்ள வேண்டுமே தவிர கொரோனா தடுப்பூசிகள் அடிப்படையில் செய்ய கூடாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தி உள்ளார்.

மாஸ்கோவில் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கோ லாவ்ரோவை ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:
சர்வதேச பயணங்களை மேற்கொள்ளும் போது கொரோனா பரிசோதனைகள் நடத்தி அதனடிப்படையில் அனுமதிப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும். தற்போது சில நாடுகள் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி என்கிறது.
இது குறித்து சில புரிதல்கள் ஏற்பட வேண்டியது உள்ளது. இது தொடர்பாக ரஷ்யா வெளியுறவு அமைச்சருடன் ஆலோசித்தேன். சர்வதேச பயணங்களுக்கான அனுமதியை கொரோனா தடுப்பூசி அடிப்படையில் முடிவெடுக்க கூடாது.
கொரோனா பாதிப்பில் இருந்து ரஷ்யாவும் இந்தியாவும் தங்கள் நாட்டு மக்களை பாதுகாத்து உலக நாடுகளுக்கும் உதவுகின்றன. சர்வதேச பயண அனுமதி தொடர்பாக உலக நாடுகள் தெளிவான முடிவை எடுக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
-
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி












Click it and Unblock the Notifications