ஊரடங்குகளை அமல்படுத்துவதால் மட்டுமே கொரோனா வைரஸை அழித்துவிட முடியாது: உலக சுகாதார நிறுவனம்
ஜெனிவா: ஊரடங்குகளை அமல்படுத்துவது மட்டுமே கொரோனா வைரஸை அழிக்க போதுமான நடவடிக்கை அல்ல என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கொரோனாவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த உலகின் பல நாடுகள் லாக்டவுன் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் கொரோனா வைரஸை அழித்துவிட முடியாது.
இத்தகைய ஊரடங்குகள், லாக்டவுன்கள் ஆகியவற்றின் மூலம் பொதுமக்களை வெளியே நடமாட வேண்டாம்; வீடுகளில் முடங்கி இருங்கள் என அறிவுறுத்தப்படுகிறது. இவை அனைத்துமே மருத்துவ துறை மீதான குவிகிற அழுத்தங்களை குறைக்கக் கூடியவை மட்டும்தான்.
ஊரடங்கு மற்றும் லாக்டவுனை அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும் என அழைப்பு விடுக்கப்படுகிறது. இது கொரோனா வைரஸை அழிப்பதற்கான 2-வது வாய்ப்பாக கருதப்படுகிறது. ஏனெனில் கொரோனாவை உங்கள் நாட்டுக்குள் நுழையவிடக் கூடாது என்கிற முதல் வாய்ப்பை உலக நாடுகள் தவறவிட்டுவிட்டன.
Asking people to stay at home & shutting down population movement is buying time & reducing the pressure on health systems. But on their own, these measures will not extinguish epidemics: Tedros Adhanom Ghebreyesus, Director-General of WHO #CoronavirusLockdown #COVID19 pic.twitter.com/kkP1DBltcQ
— ANI (@ANI) March 25, 2020
அதேநேரத்தில் இந்த 2-வது வாய்ப்பில் எப்படி கொரோனாவை அழிக்கப் போகிறோம் என்பதுதான் கேள்வி. கொரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்துதல், பரிசோதித்தல், சிகிச்சை அளித்தல், நோய் தொற்று பரவலை கண்டுபிடித்தல் என்பவை மட்டுமே போதுமானது அல்ல. இந்த கொரோனா வைரஸை எப்படி தடுத்து அழிப்பது என்பதும் முக்கியம்.
இவ்வாறு டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications