Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒபெக் நாடுகள் எடுத்த முக்கிய முடிவு.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்.. என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

பிராங்பர்ட் : எண்ணெய் விலையை அதிகரிக்கும் நோக்கில் பெட்ரோலியத்தை ஏற்றுமதி செய்யும் ஒபெக் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளன.

ஒபெக் நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் வியன்னாவில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தி அளவில் 20 லட்சம் பேரல்களை குறைப்பது என ஒபெக் நாடுகள் முடிவெடுத்துள்ளன.

இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் என்றும், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் விலை உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை சரிவு

கச்சா எண்ணெய் விலை சரிவு

உலக நாடுகளின் பொருளாதாரத்தில் மந்தநிலை மற்றும் தேவை குறைந்தது போன்ற காரணங்களால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 4 வாரங்களாக சரிந்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 30 சதவீதம் குறைந்த நிலையிலும் கடந்த 6 மாதங்களாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் உள்ளன.

விலையில் மாற்றமில்லை

விலையில் மாற்றமில்லை

சர்வதேச சந்தையில் இந்தியா வாங்கும் கச்சா எண்ணெயின் சராசரி விலை செப்டம்பர் மாதத்தில் பேரல் 90.71 டாலராகச் சரிந்தது. எண்ணெய் நிறுவனங்கள் இன்னும் இழப்பிலிருந்து மீளவில்லை என்பதால்தான் விலைக் குறைப்பு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

ஒபெக் கூட்டம்

ஒபெக் கூட்டம்

இந்நிலையில், பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பின் (ஒபெக்) கூட்டம் நேற்று வியன்னாவில் நடைபெற்றுள்ளது. ஒபெக் நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தி அளவைக் குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தேவை மந்தமாக இருப்பது மற்றும் கச்சா எண்ணெய் விலையை கட்டுக்குள் வைக்கும் நோக்கில் ஒரு முக்கிய முடிவு இந்தக் கூட்டத்தில் எட்டப்பட்டுள்ளது.

20 லட்சம் பீப்பாய் உற்பத்தி குறைப்பு

20 லட்சம் பீப்பாய் உற்பத்தி குறைப்பு

அதன்படி, நாள் ஒன்றுக்கு 20 லட்சம் பீப்பாய் அளவுக்கு உற்பத்தியை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வருவதாக அந்த நாடுகள் அறிவித்துள்ளன. உலகப் பொருளாதாரம் மற்றும் எண்ணெய் சந்தை கண்ணோட்டங்களை சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 பெட்ரோல் - டீசல் விலை உயரும்

பெட்ரோல் - டீசல் விலை உயரும்

கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்திருப்பதால், சர்வதேச அளவில் பெட்ரோல்-டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. கடந்த 138 நாட்களாக இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து வரும் நிலையில், ஒபெக் நாடுகளின் இந்த முடிவால் நவம்பரில் பெட்ரோல் - டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இன்று பெட்ரோல் - டீசல் விலை

இன்று பெட்ரோல் - டீசல் விலை

இன்றைய நிலையில், இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பதால் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது. 138வது நாளாக இன்றும் பெட்ரோல்- டீசல் விலை மாற்றமின்றித் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+