போர் நிறுத்தத்தை அறிவிக்கிறது பாக். தலிபான்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசுடன் நடத்தி வரும் அமைதிப் பேச்சுவார்த்தையின் பலனாக, விரைவில் போர் நிறுத்த அறிவிப்பு வெளியாகும் என பாகிஸ்தான் தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானை குருசேத்ர நாடாகவும், கொடிய வன்முறை களமாகவும் மாற்றி வரும் தலிபான் தீவிரவாதிகள் ஆயுதம் மற்றும் வெடிகுண்டு கலாசாரத்துக்கு விரைவில் விடை கொடுத்து விட்டு அமைதிப்பாதையில் திரும்ப உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானில் பத்து வருடங்களாக வன்முறை தாக்குதல் மற்றும் கலவரங்களின் மூலம் சுமார் 40 ஆயிரம் மக்களின் உயிரை பறித்த தலிபான் தீவிரவாத இயக்கத்தின் பிரதிநிதிகளுடன் பிரதமர் நவாஸ் ஷெரிப் அரசு கடந்த சில தினங்களாக அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
ஆயுதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றால், எங்களது கட்டுப்பாட்டில் முன்னர் இருந்த வசிரிஸ்தானில் இருந்து ராணுவப் படைகள் வெளியேற வேண்டும். பாதுகாப்புப் படையின் காவலில் சிறை வைக்கப்பட்டுள்ள தலிபான் அல்லாத போராளி குழுவினரை விடுதலை செய்யவேண்டும் என்றும் தலிபான்கள் அரசுக்கு நிபந்தனை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் அரசினால் தடை செய்யப்பட்ட தலிபான் இயக்கத்தின் ஷுரா எனப்படும் உயர்மட்ட ஆலோசனை குழு அரசின் கோரிக்கையான போர் நிறுத்தம் குறித்த முடிவை எடுக்க சம்மதம் தெரிவித்தது.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் அரசு தரப்பில் தலைமை வகிக்கும் பத்திரிகையாளர் இர்ஃபான் சித்திக்கி பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து விளக்கி கூறினார்.
இந்நிலையில், தலிபான் போராளிகள் அநேகமாக ஓரிரு நாளில் வன்முறை பாதையை கைவிட்டு நல்ல விதமான அரசியல் பாதைக்கு திரும்பக் கூடும் என்று பாகிஸ்தானில் இருந்து நம்பகமான தகவல் வெளியாகியுள்ளது.
ரணங்களும்,வடுக்களையுமே பதிலாக அளித்து கொண்டிருந்த தலிபான்களின் இம்முடிவு ஒரு புதிய மகிழ்ச்சி சாகப்தத்தை அளிக்கும் என நிச்சயமாக தெரிகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications