இனி “பசி”யும் பறந்து போகும் – பசியைத் தடுக்க புதிய மாத்திரை
லண்டன்: "பசி" இந்த இரண்டெழுத்து வார்த்தைதான், மனிதர்கள் அனைவரையும் ஆட்டிப் படிக்கின்றது.
அதுமட்டும் இல்லை என்றால் உலகில் மனிதர்களுக்கு வேதனைகளே இல்லை எனலாம்.
மனிதன் உழைப்பது வயிற்று பசியை ஆற்றுவதற்குத்தான். ஆனால், அந்த பசி ஏற்படாமல் தடுப்பதற்கு தற்போது ஒரு புதுவித மாத்திரை தயாரிக்கப்பட்டுள்ளது.
பசியைப் போக்கும் மாத்திரை:
அந்த மாத்திரையை லண்டன் இம்பீரியல் கல்லூரியும், மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.அந்த மாத்திரையில் உள்ள "அசிட்டேட்" என்ற மூலக்கூறு உணவு பொருளில் உள்ள நார்ச்சத்து செரிக்காமல் தடுக்கிறது. இதன் மூலம் உணவுப் பொருட்களின் மீதான நாட்டம் குறைகிறது.
உணவு செரிமானம்:
செரிமானமாக்கும் நார்த்திசுக்கள் பல்வேறு தாவரங்களிலும், காய்கறிகளிலும் காணப்படுகின்றது.ஆனால், உணவைப் பொறுத்த வரையில் இதன் அளவு குறைவாகவே காணப்படுகின்றது.
வெளியேறும் அசிட்டேட்:
அப்படி உணவுப் பொருள் செரிக்கும்போது பெருமளவிலான அசிட்டேட் கழிவாக வெளியாகின்றது.ஆனால், இந்த மாத்திரையானது அசிட்டேட் கழிவாக மாறுவதை தடுத்து விடுகின்றது.
மாத்திரையின் உபயம்:
அதனால்தான் பசிக்கும் தன்மை குறைக்கின்றது.ஏனெனில்,இந்த மாத்திரையே அசிட்டேட் சத்துகளைக் கொண்டுள்ளது.
நார்ச்சத்து உணவுகள்:
"கற்காலத்தில் 100 கிராம் அளவிலான நார்ச்சத்து பொருட்களை மக்கள் உண்டனர்.ஆனால், தற்போது பெருகி வரும் துரித உணவுகளால் இதன் அளவு குறைந்து போய்விட்டது.இதனால் மனிதர்களின் உடலும் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகின்றது" என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மூளைக்கு கட்டளை:
இந்த மாத்திரையின் தாக்கத்தினால் ரத்தம், பெருங்குடல் மற்றும் மூளைக்கு உணவு பொருட்கள் சாப்பிட வேண்டாம் என கட்டளை பிறப்பிக்கப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications