கொரோனா பாதிப்பு ஆச்சர்யப்பட வைத்த ரஷ்யா.. அதிர வைக்கும் இந்தியா.. மிகப்பெரிய திருப்பம்
மாஸ்கோ: மருந்து கண்டுபிடிப்பில் உலக நாடுகள் ரஷ்யாவை சந்தேக கண்ணோடு பார்க்கும் நிலையில், அங்கு கொரோனா உயிரிழப்பும், பாதிப்பும் மிக வேகமாக குறைந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் தொற்று பாதி உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு மாறி உள்ளது.
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் பரவ தொடங்கி கொரோனா தொற்றால் உலகில் இதுவரை 2,53,77,704 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 850,149 பேர் இதுவரை மரணம் அடைந்துள்ளனர்.
கொரோனா தொற்றில் இருந்து உலகம் முழுவதும் 17,700,949 பேர் மீண்டுள்ளனர். உலகில் கொரோனா பாதிப்புடன் 6,826,606 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

அமெரிக்கா 2வதுஇடம்
உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 79,457 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2வது அதிகபட்சமாக பாதிப்பு அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 33974 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 15346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா 3வது இடம்
உலகிலேயே அதிகபட்ச கொரோனா பாதிப்பை சந்தித்துள்ள அமெரிக்காவில் தொற்று பாதிப்பு 6,173,229 ஆக உயர்ந்துள்ளது. உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 2வது நாடான பிரேசிலில் 3,862,311 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக பாதிப்பை சந்தித்த 3வது நாடான இந்தியாவில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 3,619,169 ஆக உயர்ந்துள்ளது.

ஆச்சர்யப்படுத்தும் ரஷ்யா
இதனிடையே கொரோனா பாதிப்பு அதிகமாக சந்தித்து வந்த ரஷ்யாவில் தொற்று பாதிப்பு அண்மைக்காலமாக வேகமாக குறைந்து வருகிறது. ரஷ்யாவில் தற்போது 990326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 17093 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழப்பை தடுப்பதிலும், பாதிப்பை குறைப்பதிலும் ரஷ்யா வல்லமையுடன் திகழ்கிறது. ரஷ்யாவின் தடுப்பூசியை உலக நாடுகள் சந்தேகதித்து வரும் நிலையில் தொற்று பாதிப்பு வேகமாக குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 4980 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெறும் 68 பேர் தான் இறந்துள்ளனர். ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பும் குறையவில்லை. உயிரிழப்பும் குறையவில்லை. ரஷ்யா என்று இல்லை.. ஐரோப்பா முழுவதுமே தொற்று பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது.
Recommended Video

தொற்று கிடுகிடு உயர்வு
ஆனால் இந்தியாவில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.கொரோனா தொற்றால் உலகிலேயே ஒரு நாளில் அதிக பாதிப்பு மற்றும் அதிக மரணத்தை சந்தித்த நாடாக இந்தியா மாறி உள்ளது. எந்த நாட்டிலும் இல்லாத அளவாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 79,457 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 960 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,619,169 ஆக உள்ளது. வெறும் ஏழு நாளில் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்தியாவில் 64,617 பேர் தொற்றால் பலியாகி உள்ளனர்.
-
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications