உறைந்த பனியில் இப்படி ஒரு நீச்சலா.. இவங்களுக்கு தில்லு ஜாஸ்திதான்.. நமக்கு இந்த பனியே தாங்கலையே!
ரஷ்யாவில் பனியில் உறைந்த ஆற்றில் நீச்சல் அடித்து விளையாடினர் மக்கள்.
மாஸ்கோ: ரஷ்யாவில் பனியில் உறைந்த ஆற்றுப்படுகையில் மக்கள் நீச்சலடித்து மகிழ்ச்சியாக விளையாடும் காட்சிகள் வைரலாகியுள்ளது.
உலகின் மிக குளிர்ந்த பிரதேசங்கள் உள்ள நாடுகளில் முதன்மையானது ரஷ்யா. அங்கு டிசம்பர், ஜனவரி மாதங்களில் பனிப்பொழிவு மிக அதிகமாக இருக்கும். நீர் நிலைகள் எல்லாம் உறைந்து போய் இருக்கும். இப்படிப்பட்ட சூழலில் உறைந்து போன ஆற்றில் அப்பகுதி மக்கள் நீச்சலடித்து மகிழ்ந்து வருகிறார்கள்.

அப்படியாக ரஷ்யாவின் ஓம்ஸ் நகரில் உள்ள ஆற்றில் ஒன்றிணைந்த மக்கள் சிலர், கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் நீச்சல் உடையில் ஆற்றில் குளித்த காட்சிகள் வைரலாகியுள்ளன. ஐஸ் கட்டிகளை உடைத்து, அடியில் உள்ள தண்ணீரில் குதித்து அவர்கள் ஐஸ் பாத் எடுத்துக் கொள்கின்றனர்.

ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் இந்த ஐஸ் பாத் நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். இளவயது மக்கள் மட்டுமின்றி வயதானவர்களும் அந்தக் குழுவில் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி அணிந்த ஒருவர் வழிநடத்த, நீச்சல் உடையில் ஆண்களும், பெண்களும் பனி சூழ்ந்த காடு போன்ற பகுதியைக் கடந்து அந்த ஆற்றை அடைகின்றனர்.
WATCH: Who needs a wet suit? Braving freezing cold, Siberians go swimming in an icy river in the Russian city of Omsk pic.twitter.com/r8mghIWlCl
— Reuters India (@ReutersIndia) December 29, 2020
முதலில் உடலை குளிர் நீரில் குளிப்பதற்கு சில உடற்பயிற்சிகளைக் குதூகலமாகச் செய்து தயாராகின்றனர். பின்னர் குளிர் நீரில் இறங்கி மகிழ்ச்சியாக நீச்சல் அடிக்கின்றனர். இந்தக் காட்சிகளைப் பார்க்கும் போதே நமக்கு குளிருகிறது.
நம்மூரில் ரஷ்யா அளவிற்கு பனிப்பொழிவு இல்லையென்றாலும், இந்த பனிக்கே நம்மால் பச்சத்தண்ணீரில் கை வைக்க முடியவில்லை. ஆனால் அவர்கள் உறைந்த நீருக்கடியில் உள்ள மிகக் குளிர்ந்த நீரில் குளிப்பதை பார்க்கும் போதே நமக்கு உடல் எல்லாம் நடுங்குகிறது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications