நிலைப்பாட்டை மாற்றிய WHO.. பூஸ்டர் டோஸ் "அவசர அவசியம்" என பரிந்துரை! சமமாக கிடைக்க அட்வைஸ்
ஜெனீவா: கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் பயன்பாட்டை உடனடியாக பரவலாக்க ஆதரவளிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஓமிக்ரான் கொரோனா தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு நேற்று இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், (TAG-CO-VAC) என்ற கலவை கொண்ட கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை மக்களுக்கு உடனடியாக செலுத்த ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.

கொரோனாவால் அதிக ஆபத்தை எதிர்நோக்கி இருக்கும் தீவிர நோய் பாதிப்பிற்கு உரியவர்கள், முதியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி இருக்கிறது.
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் கொரோனாவால் ஏற்படும் தீவிர பாதிப்பிலிருந்து பாதுகாக்கலாம் என்றும் உயிரிழப்புகள் குறையும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
"குறுகிய மற்றும் இடைக்கால தடுப்பூசி விநியோகம் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. ஆனால் அனைத்து தரப்பினருக்கும் சமமான அளவில் தடுப்பூசி செலுத்துவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஏற்றத்தாழ்வு பார்க்காமல் அனைத்து தரப்பினருக்கும் சமமாக கொரோனா தடுப்பூசி சென்றடைவதை உறுதிபடுத்த வேண்டும்." என WHO குழு அறிவுறுத்தி உள்ளது.
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தீவிர கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாப்பதாகவும், 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை காட்டிலும் மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வது அதிக பயன்தருவதாகவும் உலக புகழ்பெற்ற மருத்துவ இதழான லான்செட் கடந்த 2021 நவம்பர் மாதம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையை உலக சுகாதார நிறுவன குழு சுட்டிக்காட்டியுள்ளது.
"ஆல்பா, பீட்டா, டெல்டா, ஓமைக்ரான் என அடுத்தடுத்து உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் உருவாகி வருவதால் காலத்திற்கு ஏற்ப கொரோனா தடுப்பூசிகளை புதுப்பிக்க வேண்டும். எதிர்காலத்திலும் கொரோனா தடுப்பூசிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வெவ்வேறு மாதிரி கொரோனா வைரஸ் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் பன்முகத் தன்மை கொண்ட தடுப்பூசிகளை அறிமுகம் செய்ய வேண்டும்" என அந்த குழு ஆலோசனை தெரிவித்துள்ளது.
புதிய கொரோனா மாதிரியான BA.2., ஓமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பரவி இருப்பதாக தெரிவித்துள்ள WHO, தொடர்ந்து கொரோனா வைரஸ் குறித்த ஆய்வில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளது.
கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், வெவ்வேறு கொரோனா மாதிரிகளிடம் தடுப்பூசி எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த தகவலை தங்களிடம் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு உள்ளது. இதன் மூலம் கொரோனா தடுப்பூசிகளின் பயன்கள் மற்றும் அவற்றில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்த ஆலோசனைகளை தங்களால் வழங்க முடியும் என உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தெரிவித்து உள்ளது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications