கன்னியாகுமரி இளைஞர் மதுவுக்கு அடிமை.. திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இப்படியும் செய்வார்களா?
கன்னியாகுமரி: கடந்த ஜனவரி 25-ந்தேதி திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் திருவனந்தபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர், கொல்லம் செல்வதற்காக காத்திருந்தார். அவர் தனது கை பையில் 5 லட்சம் மதிப்புள்ள நகைகளை வைத்திருந்தார். இந்நிலையில் மதுவிற்கு அடிமையான கன்னியாகுமரி இளைஞர், திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் பயணியிடம் நகை திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கேரளாவில் திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் மிகவும் முக்கியமான ரயில் நிலையம் ஆகும். இங்கு ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள். கடந்த ஜனவரி 25-ந்தேதி திருவனந்தபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர் திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் நின்று கொண்டிருந்தார். கொல்லம் செல்வதற்காக ரயிலி ஏறக் காத்திருந்தார். அவரது கையில் இருந்த பையில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நகைகளை வைத்திருந்துள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமி , கண் இமைக்கும் நேரத்தில் அந்த பெண்ணிடம் இருந்த கை பையை திருடி விட்டு தப்பிச் சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இது பற்றி ரயில்வே போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து ரயில்வே குற்றப்பிரிவு சிறப்பு போலீசாரும், நிலைய ரயில்வே போலீசாரும் அங்கு பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதில் பதிவாகி இருந்த மர்ம நபரை தீவிரமாக தேடினார்கள். இதுபற்றி அண்டை மாநிலமான தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்ட போலீசிடம் போலீசார் கூறியிருந்தார்கள்.
இந்த நிலையில் திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இருந்து கை பையுடன் வெளியேறிய நபர், கடந்த 2 தினங்களுக்கு முன் தம்பானூர் பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும் படியாக சுற்றி வருவது தெரியவந்தது. ரயில்வே குற்றப்பிரிவு சிறப்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த ஆசாமியை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
அதில் அவர், குமரி மாவட்டம் பூதப்பாண்டியை சேர்ந்த சியாம் கிறிஸ்பின்(வயது 42) என்பதும், சம்பவத்தன்று ரயில் நிலையத்தில் பெண்ணிடம் இருந்த கை பையை திருடியதும், அதில் இருந்த நகைகளை நெடுமங்காடு வாண்டா பகுதியில் உள்ள ஒரு அரிசி ஆலை அருகே மறைத்து வைத்து இருப்பதாக கூறியிருக்கிறார். உடனே போலீசார் அங்கு சென்று, புதைத்து வைத்து இருந்த நகைகளை மீட்டனர். அதைத்தொடர்ந்து போலீசார் சியாம் கிறிஸ்பினை கைது செய்து திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுபற்றி திருவனந்தபுரம் போலீசார் கூறும் போது, சியாம் கிறிஸ்பின் மதுவுக்கு அடிமையானவர் , வேலைக்கு செல்லாததால் மது குடிப்பதற்காக திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் வேறு சம்பவங்களில் ஈடுபட்டாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
-
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
இங்கிட்டு ஹரி நாடார் மாதிரி..அங்கிட்டு அவரு! கழுத்து வலிக்க வலிக்க தங்கநகைகள்! ஒரே நாளில் உடைத்த ஐடி -
தாள்ளாடுதே தங்க சந்தை.. தாறுமாறாக விலை இருப்பது ஏன்? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கும்? -
தங்கம் ரொம்பவே ரிஸ்க்.. "இந்த" கோல்ட் பக்கமே போக வேண்டாம்.. உடைத்து பேசிய ஆனந்த் சீனிவாசன் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே












Click it and Unblock the Notifications