முஸ்லீம் ஃபக்கீர்களை சாலையில் நிற்க வைத்து.. ச்சீ.. என்ன கொடூரம் இது.. உ.பியில் நடந்த பரபர சம்பவம்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் முஸ்லீம் பக்கீர்கள் மோசமாக அவமதிக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நுபுர் சர்மா, சமீபத்தில் இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகத்திற்கு எதிராக கடுமையாக பேசி இருந்தார். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் நபிகளை கடுமையாக இகழ்ந்து சில கருத்துக்களை நுபுர் சர்மா வைத்து இருந்தார்.
இவரின் கருத்துக்கு எதிராக சர்வதேச அளவில் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. கத்தார் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவிடம் விளக்கமும் கேட்டன. இதையடுத்து நுபுர் சர்மா பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சர்வதேச விமர்சனம்
இந்த விவகாரம் சர்வதேச அளவில் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. இந்தியாவிற்கு சர்வதேச அளவில் இந்த விவகாரம் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்தான் சர்ச்சைகளுக்கு இடையில், உத்தர பிரதேசத்தில் முஸ்லீம் பக்கீர்கள் மோசமாக அவமதிக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இஸ்லாமியர் பக்கீர்கள் என்பவர்கள், அம்மார்க்கத்தை தீவிரமாக பின்பற்றும், அமைதியை விரும்பும், துறவிகள் போன்றவர்கள் ஆவர்.

இஸ்லாம் முக்கியம்
தங்கள் வாழ்க்கையை இஸ்லாத்திற்கு அர்ப்பணித்தவர்கள். இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் கோன்டா என்ற பகுதியில் உள்ள டெகூர் கிராமத்தில், முஸ்லீம் பக்கீர்கள் மோசமாக அவமதிக்கப்பட்டு உள்ளனர். அந்த கிராமம் வழியாக பயணம் செய்த பக்கீர்களை தடுத்து நிறுத்திய இந்துத்துவா இளைஞர்கள் சிலர்.. ஏன் இங்க வரீங்க. யார் நீங்க என்று கேட்டு அந்த இஸ்லாமிய பக்கீர்களை துன்புறுத்தி உள்ளனர்.

தாக்குதல்
உங்களுடைய ஆதார் கார்டுகளை கொடுங்கள் என்று முதலில் கேட்டு பக்கீர்களை தொல்லை செய்துள்ளனர். அதற்கு அவர்கள்.. நாங்க துறவிங்க.. எங்ககிட்ட அதெல்லாம் இல்லை என்று சொன்னதும்... இந்துத்துவா இளைஞர்கள் அவர்களை சுற்றி நின்று.. தீவிரவாதிகள்., தீவிரவாதிகள்.. ஜிஹாதிகள் என்று கோஷம் எழுப்பி உள்ளனர். தொடர்ந்து அவர்களை தொல்லை செய்த அந்த இளைஞர்கள்.. நீங்கள் யார் என்பதை நிரூபியுங்கள்.

நிரூபியுங்கள்
ஐடி கார்டு காட்டுங்கள். இல்லையென்றால்.. உங்களை தாக்குவோம் என்று கூறி மிரட்டி உள்ளனர். அதோடு கையில் இருந்த குச்சியால் அவர்களை லேசாக தாக்கி உள்ளனர். மேலும், அவர்களை தோப்புக்கரணம் போட வைத்து தொல்லை செய்துள்ளனர். இதில் சில இளைஞர்கள் காவி துண்டு அணிந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த முஸ்லீம் பக்கீர்கள் மிகவும் வயதானவர்களாக காணப்பட்டனர்.

மோசமான சம்பவம்
இந்த கொடுமையான சம்பவத்தை தடுக்க முயன்ற இன்னொரு இளைஞரையும் இந்துத்துவா கும்பல் தள்ளிவிட்டது. வயதான காலத்தில், கண்களில் பயத்தோடு முஸ்லீம் பக்கீர்கள் அங்கேயே தோப்புக்கரணம் போட்டனர். இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்தியாவில் இஸ்லாமியர்கள் துன்புறுத்தப்படுவதாக வளைகுடா நாடுகள் விமர்சனம் வைக்கும் நிலையில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
-
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications