உ.பி.: யோகி போட்டியிடும் கோரக்பூர் உட்பட.. 57 தொகுதிகளுக்கு நாளை தேர்தல்! பலத்த எதிர்பார்ப்பு
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் யார் ஆட்சி அமையும் என்பதை தீர்மானிக்கும் விதமாக நாளைய வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 403 சட்டசபைத் தொகுதிகள் இருக்கின்றன. இங்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கெனவே 5 கட்ட தேர்தல் முடிந்திருக்கிறது.
உத்தரப்பிரதேச தேர்தலில் வெற்றி பெறும் கட்சி, மத்தியில் ஆட்சியில் அமரும் என்பது நம்பிக்கை. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் நாளை 6ம் கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது.

உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. இந்த தேர்தலில் சமாஜ்வாதி, பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் பலத்த போட்டியில் நான்கு முனை போட்டி உருவாகியுள்ளது. பெரிய கூட்டணிகள் இல்லாமல், பெரிய கட்சிகள் எல்லாம் சிறிய கட்சிகளோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து வருகின்றன.மேற்கில் தொடங்கி நாளை கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது.

6ம் கட்ட தேர்தல்
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளில் இதுவரை 292 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்துள்ளது. நாளை நடைபெறும் 6வது கட்ட தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள 10 மாவட்டங்களில் 57 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் முக்கிய தலைவர்கள் போட்டியிடும் அம்பேத்கர் நகர், சித்தார்த்நகர், கோரக்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் களம் அனல் பறந்துவருகிறது.

பாஜக
இந்த 57 தொகுதிகளில் பாஜக கடந்த தேர்தலில் 48 இடங்களைக் கைப்பற்றியது. தற்போது இந்த தொகுதிகளில் 11 ரிசர்வ் தொகுதிகள் இருப்பது பாஜகவுக்கு பின்னடைவாக இருக்கிறது. பாஜகவுக்கு நாளை நடக்க இருக்கும் தேர்தல் மிக முக்கியமாகும். மேற்கு உத்தரப்பிரதேசத்தில் ராஷ்ட்ரிய லோக் தள் மற்றும் சமாஜ்வாதி கூட்டணி பலமாக இருக்கிறது. ஆக்ரா பகுதிகளில் பகுஜன் சமாஜ் பலமாக இருக்கிறது. முதல்வர் தொகுதிகளில் பாஜக பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

யோகி ஆதித்யநாத்
உத்தரப்பிரதேசத்தில் நாளை நடைபெறவுள்ள தேர்தலில் 676 வேட்பாளர்கள் போட்டியில் இருக்கிறார்கள். அதில் உத்தரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் லல்லு தம்குகியில் போட்டியிடுகிறார். பாஜகவில் இருந்து சமாஜ்வாதி கட்சியில் இணைந்த சுவாமி பிரசாத் மவுரியா பைசல்நகரிலும், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது சொந்த தொகுதியான கோரக்பூரிலும் போட்டியிடுகிறார்கள். இதனால் நாளைய தேர்தல் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

கோரக்பூர்
சட்டசபைத் தேர்தலில் முதல் முறையாக கோரக்பூரில் களமிறங்கும் யோகி ஆதித்யநாத்துக்கு ஆதரவாக இந்து யுவ வாஹினி உள்ளிட்ட பல இந்து அமைப்புகள் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. யோகியை எதிர்த்து, சமாஜ்வாதி சார்பில் முன்னாள் பாஜக அமைச்சர் உபேந்திரநாத்தின் மனைவி களமிரங்குகிறார்.
ஆஸாத் கட்சியின் தலைவர் சந்திரசேகர ஆஸாத்தும் யோகியை எதிர்த்து போட்டியிடுகிறார். இதனால் இந்த தேர்தல் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
புதுச்சேரியில் மார்ட்டின் மகனால் தெறித்து ஓடும் பாஜக? ரங்கசாமி போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. அப்போ விஜய் -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்! -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்?












Click it and Unblock the Notifications