''700 கலவரம் நடந்த இடத்தில் இப்போ ஒரு கலவரம் கூட நடக்கவில்லை'' - உபி பிரசாரத்தில் யோகி ஆதித்யநாத்
லக்னோ: சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி நடத்தியபோது ஏகப்பட்ட கலவரங்கள் நடந்தது. தற்போது எந்த கலவரமும் இல்லாமல் அமைதியாக இருப்பதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை ஐந்து கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளன.
உத்தரப்பிரதேசத்தில் 6 ஆம் கட்ட தேர்தல் வரும் 3ம் தேதி நடைபெறுகிறது. மார்ச் 10ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

யோகி ஆதித்யநாத்
மீதமிருக்கும் வாக்குப்பதிவுக்காக உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் சித்தார்த்நகரில் நடந்த பிரசாரத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். அப்போது, ''உத்தரப்பிரதேசத்தில் பாஜக மிகப்பெரிய வளர்ச்சியைக் கொண்டு வந்துள்ளது. இதற்கு முன் ஆட்சி செய்த பகுஜன் சமாஜ் கட்சி தங்கள் வளர்ச்சியை மட்டுமே பார்த்தது. ஆனால் பாஜக ஒட்டுமொத்த மக்கள் வளர்ச்சியைப் பார்க்கிறது.

கலவரம்
உத்தரப்பிரதேசத்தில் 2017க்கு முன் பல கலவரங்கள் நடந்துள்ளன. சமாஜ்வாதி மட்டுமே 700க்கும் அதிகமான கலவரங்களை செய்துள்ளது. அதேபோல் பகுஜன் சமாஜ் மாநிலம் முழுவதும் 300க்கும் அதிகமான கலவரங்களை செய்துள்ளது. ஆனால், 2017க்கு பிறகு பாஜக உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி அமைத்த பிறகு ஒரு இடத்திலும் கலவரம் நடக்கவில்லை. எந்த ஒரு இடத்திலும் போராட்டங்களும் நடக்கவில்லை'' என்று தெரிவித்தார்.

தீவிரவாதம்
உபி பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, ''சமாஜ்வாதி கட்சி தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறது. பாஜக வளர்ச்சிக்காக உழைத்து வருகிறது. பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படுகிறது. சிலிண்டர் எல்லாருக்கும் சென்று சேர்ந்திருக்கிறது'' என்று தெரிவித்தார்.

தாக்குதல்
அதேபோல் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசிகையில், ''இந்தியா ஒருபோதும் பாரத மாதாவை தலை குனியவைத்ததில்லை. நாமாக போய் யாரையும் தாக்குதல் நடத்தவில்லை. அதேநேரம் போர் என்று வரும்போது எல்லை தாண்டி போகவும் தெரியும், எல்லை தாண்டி தாக்குதல் நடத்தவும் முடியும்'' என்று தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல்












Click it and Unblock the Notifications