முதல்வர் ஸ்டாலின் சார்பில் கார் பரிசு.. வெல்லும் வீரர் யார்?.. துவங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
முதல்வர் ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது
மதுரை: உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலக அளவில் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு விழா, வருடந்தோறும் தை 3ம் தேதி நடைபெறுவது வழக்கம்.
ஆனால் இந்த முறை தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கிறது.. லாக்டவுனும் அமலில் உள்ளது.. அதனால், ஜல்லிக்கட்டு இன்று நடக்கிறது.. ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை அமைச்சர் மூர்த்தி, மதுரை சரக டிஐஜி மற்றும் அதிகாரிகள் நேற்று நேரில் பார்வையிட்டனர்...

காளைகள்
அலங்காநல்லூர் ஜல்லிகட்டிற்காக இந்த ஆண்டு முதல்முறையாக ஆன்லைன் மூலமாகவே ஜல்லிக்கட்டு காளைகளும், மாடுபிடி வீரர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.. அதன்படி, 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்யப்பட்டன.. ஆனால், பார்வையாளர்கள் 150பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது... தேர்ந்தெடுக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள், மாடுபிடி வீரர்களுக்கும் இன்று காலை மீண்டும் மருத்துவ குழுவினரால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது..

போட்டி
பிறகு அவர்கள் களத்தில் விளையாட அனுமதியும் தரப்பட்டதையடுத்து, போட்டி தொடங்கியது.. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தனர். களமிறங்கும் காளைகள் மற்றும் வீரர்களுக்கு தலா ஒரு தங்ககாசு பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது... அதைவிட முக்கியம், இந்த போட்டியில் தேர்வு செய்யப்படும் சிறந்த காளைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் தங்க காசும், புதிய கார் ஒன்றும் வழங்கப்படவுள்ளது...

உதயநிதி
அதுமட்டுமல்ல, சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் மாடுகளை அடக்கும் மாடுபிடி வீரருக்கு தங்க காசும் பரிசாக வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்திருக்கிறார். ஆக மொத்தம், ஐந்தாயிரத்திற்கும் குறையாமல் ஒவ்வொரு காளைக்கும் பரிசுகள் வழங்கப்பட இருப்பதாக ஜல்லிக்கட்டு விழா கமிட்டிக்குழுவினர் தெரிவித்திருந்ததையடுத்து, ஆவல் பெருகி உள்ளது.. இதைதவிர, எல்இடி டிவி, பீரோ, கட்டில் உள்ளிட்ட சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன...

கோயில் காளை
வீரர்கள் தங்கள் காளைகளை அடக்கி வருகின்றனர்.. பாதுகாப்பு பணியில் 1,500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்... முன்னதாக, நேற்றைய தினம், ஜல்லிக்கட்டு காளை வாடிவாசல் வழியாக வர வேண்டும் என்ற முறை இருந்ததால், முத்தாலம்மன் கோவிலில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் கிராம முக்கியஸ்தர்கள் தெய்வ வழிபாடு செய்த பிறகு, கோயில் காளைகளை மட்டும் ஜல்லிகட்டு வாடிவாசல் வழியாக அழைத்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications