சீனிவாசனுக்கு தான் உரிமை.. தேவர் கவசத்திற்கு ஓபிஎஸ் சொந்தம் கொண்டாட முடியாது.. சீறிய செல்லூர் ராஜூ!
மதுரை : தேவர் தங்கக் கவசம் தனிநபருக்கு சொந்தமானது கிடையாது என்றும், கட்சியின் பொருளாளர் என்பதற்காகவே ஓபிஎஸ்ஸுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தற்போது அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் உள்ளார். அதிமுக வங்கி கணக்குகளை பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனே நடைமுறைப்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் அவரிடம் தான் தங்கக் கவசத்தை கொடுக்க வேண்டும் என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுக்கு அதிமுக நிச்சயம் கட்டுப்படும் என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தேவர் தங்கக் கவசம்
தேவர் ஜெயந்தியின் போது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிக்க அதிமுக சார்பில் கடந்த 2014-ம் ஆண்டில் 13 கிலோ தங்க கவசம் வழங்கப்பட்டது. மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கி ஒன்றின் கிளையில் அதிமுக, பசும்பொன் தேவர் நினைவாலயம் பெயரிலான வங்கி கணக்கின் லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்படும் இந்த தங்கக் கவசம் அக்டோபர் 30-ஆம் தேதி பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தியின் போது தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும். இந்நிலையில், தங்க கவசத்தை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் நாளை (அக்.26) மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

செல்லூர் ராஜூ
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நேற்று மருது சகோதரர்களின் 221 வது நினைவு நாளை முன்னிட்டு அவர்களது சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பசும்பொன் தேவருக்கு அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்க கவசம் வழங்கினார். பசும்பொன் தேவரின் தங்கக்கவசம் தனிநபருக்குச் சொந்தமானது கிடையாது. இதற்கு முன்புவரை, கட்சியின் பொருளாளர் என்பதற்காக ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.

ஓபிஎஸ் சொத்து கிடையாது
தேவர் தங்கக் கவசம் ஓபிஎஸ் எனும் தனிநபருடையதோ அல்லது அவரது அதிகாரத்திற்கு உட்பட்டதோ கிடையாது. தேவரின் தங்கக் கவசம் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான விதிகளில் என்ன இருக்கிறது என்றால், அதிமுகவின் பொருளாளராக இருப்பவரின் கையெழுத்தைப் பெற வேண்டும் என்றுதான் உள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு கட்சியில் பிரச்சினை ஏற்பட்ட போது, ராமநாதபுரம், மதுரை மாவட்ட ஆட்சியர்களிடம் ஒப்படைத்தனர். அது போன்ற நிலை தற்போது இல்லை.

நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படுவோம்
தற்போது அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் உள்ளார். அதிமுக வங்கி கணக்குகளை பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனே நடைமுறை படுத்தி வருகிறார். எனவே அதன் அடிப்படையில் எங்களிடம் தான் தங்கக் கவசத்தை கொடுக்க வேண்டும். அதேசமயம் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அண்ணாவின் கொள்கைகளை கடைபிடிக்கும் நாங்கள் நீதிமன்ற தீர்ப்புக்கு என்றென்றும் கட்டுப்படுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் அமித் ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.. தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு! -
லால்குடியில் களமிறங்கும் ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவை பரிசு மழையில் நனைய வைத்த லீமா ரோஸ்! -
இரவோடு இரவாக ட்விஸ்ட்.. திமுக, அதிமுகவுக்கு 3ம் சக்தி செக்? முதல்வர் நாற்காலியில் அமரப்போவது இவரா? -
"விசில்" நம் தேசிய கீதம்.. மேடையில் ஓப்பனாக பேசிய ஓ.பன்னீர்செல்வம் -
2021ல் திமுக vs அதிமுக.. எந்த மண்டலத்தில் எந்தெந்த கட்சி ஆதிக்கம் செய்தது? தமிழ்நாடு MAPஐ பாருங்க! -
அதெல்லாம் முடியாதுங்க.. பாஜகவிடம் ஷோல்டரை ஏற்றிய எடப்பாடி.. லிஸ்டை பாருங்க.. அடிச்சு ஆடுறாரே! -
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு ஸ்கெட்ச்.. ஐகோர்ட்டில் பரபர மனு! -
தமிழக தேர்தல் வரலாறு: ‘ஜெ’ அணியா? ‘ஜா’ அணியா? - செங்குத்தாக உடைந்த அதிமுக.. அன்று நடந்தது என்ன? -
இதுவரை 4 முறை டெல்லிக்கு பயணம் செய்த எடப்பாடி பழனிசாமி! அதிமுக பாணியையே மாற்றிய பாஜக! -
ஸ்டாலின் டூ அண்ணாமலை வரை... 2021 தேர்தலில் டாப் 10 லீடர்கள் தொகுதிகளின் ரிசல்ட் இதுதான்.. ரீவைண்ட் -
2021ல் திமுக vs அதிமுக.. வாக்கு வித்தியாசம் வெறும் 5.7% தான்.. கேம்சேஞ்சரான நாதக, அமமுக, கமல்ஹாசன்! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா?












Click it and Unblock the Notifications