திடீரென உரசிக் கொண்ட விமானங்கள்! பதற்றத்தில் உறைந்த பயணிகள்! பரபரப்பில் ஆழ்ந்த மும்பை விமான நிலையம்!
மும்பை: மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சிறு விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விமானங்கள் தரையிறங்கும் டாக்ஸி வேயில் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமானங்களின் இறக்கைகள் ஒன்றோடு ஒன்று உரசியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேகம் குறைவாக விமானங்கள் இயக்கப்பட்டதால் பெரும் சேதம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து இந்தியா மற்றும் பல்வேறு உலக நாடுகளுக்கு நேரடி விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
எப்போதும் பரபரப்பாய் காணப்படும் இந்த விமான நிலையத்தில் தான் திடீர் விபத்து ஏற்பட்டுள்ளது. விமானங்கள் தரையிறங்கிய பின்னரும், புறப்படும் முன்னரும் இயக்கப்படும் டாக்ஸி வேயில், ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமானங்களின் இறக்கை முனைகள் ஒன்றோடு ஒன்று உரசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மும்பை விமான நிலையம்
ஏர் இந்தியாவின் ஏர்பஸ் A320 விமானமும், இண்டிகோ நிறுவனத்தின் ஏர்பஸ் A320 விமானமும் தான் உரசியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர் இந்தியாவின் AI 2732 விமானம் மும்பையிலிருந்து கோயம்புத்தூருக்கு புறப்படுவதற்காக டாக்ஸி வேயில் சென்று கொண்டிருந்தது. அதே நேரத்தில், இண்டிகோவின் 6E 791 என்ற விமானம் ஹைதராபாத்திலிருந்து மும்பை வந்த பின்னர் டாக்ஸி வேயில் நகர்ந்து கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
ஏர் இந்தியா விமானம்
இந்த நிலையில், இரு விமானங்களின் வலது பக்க இறக்கை முனைகள் ஒன்றோடு ஒன்று லேசாக மோதியதாக விமான போக்குவரத்து அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இரு விமானங்களின் வேகம் மிகக் குறைவாக இருந்ததால் பெரும் சேதம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், பாதுகாப்பு காரணமாக இரு விமானங்களும் உடனடியாக விமானங்கள் நிறுத்துமிடமான 'பே' பகுதிக்கு திரும்ப கொண்டு செல்லப்பட்டன.
DGCA விசாரணை
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், மும்பை விமான நிலையத்தில் உள்ள சிவில் விமான போக்குவரத்து பொது இயக்குநரகத்தின் (DGCA) அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வை தொடங்கினர். இந்த மோதல் எப்படி ஏற்பட்டது, டாக்ஸி வேயில் வழிகாட்டல் அல்லது ஒருங்கிணைப்பில் ஏதேனும் குறைபாடு இருந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஏர் இந்தியா
இந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், "பிப்ரவரி 3ஆம் தேதி மும்பையிலிருந்து கோயம்புத்தூருக்கு செல்லவிருந்த AI 2732 விமானம், புறப்படும் முன் டாக்ஸி வேயில் காத்திருந்தபோது, மற்றொரு விமானத்துடன் உரசியது. இதனால் எங்கள் விமானத்தின் இறக்கை முனையில் சேதம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, விமானம் தொழில்நுட்ப ஆய்வுகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை விமானம்
மேலும், விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டதாகவும், அவர்களை விரைவில் கோவைக்கு அழைத்துச் செல்ல சேர்க்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து DGCA உள்ளிட்ட அமைப்புகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இண்டிகோ
இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஹைதராபாத்திலிருந்து மும்பை வந்த 6E 791 விமானம், தரையிறங்கிய பின்னர் டாக்ஸி வேயில் நகரும்போது, மற்றொரு விமானத்தின் இறக்கை முனையுடன் லேசாக மோதியது. அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக விமானத்திலிருந்து இறக்கப்பட்டுள்ளனர். விமானம் தற்போது ஆய்வில் உள்ளது. வழக்கமான நடைமுறைகளின்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது பயணிகளுக்கு ஒரு நிம்மதியான விஷயமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், மும்பை போன்ற பரபரப்பான விமான நிலையங்களில் டாக்ஸி வேயில் ஏற்படும் சிறிய தவறுகளும் பெரிய விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதால், இந்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications