விபத்து நடப்பதற்கு சில நிமிடம் முன்பு.. சைரஸ் மிஸ்திரி சென்ற காரின் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
மும்பை: சைரஸ் மிஸ்திரி சென்ற கார் விபத்துக்குள்ளாகி இருக்கும் நிலையில், விபத்துக்குள்ளாகும் சில நிமிடங்களுக்கு முன் அந்த கார் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர் சைரஸ் மிஸ்திரி.
சைரஸ் மிஸ்திரி குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு நேற்று தனது காரில் பயணம் மேற்கொண்டார்.

கார் விபத்து
மும்பை அருகே உள்ள பால்கர் மாவட்டத்தின் சூர்யா ஆற்றுப்பாலம் அருகே சென்றுகொண்டிருந்த போது திடீரென அவரது கார் விபத்துக்குள்ளானது. இதில் சைரஸ் மிஸ்திரி மற்றும் அவருடன் பயணித்த ஜஹாங்கிர் பன்டோல் ஆகிய இருவரும் பலியாகினர். இந்த விபத்தில் சைரஸ் மிஸ்திரி தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். ஜஹாங்கிருக்கு இடது காலில் எலும்பு முறிவும் தலையில் காயமும் ஏற்பட்டது.

போலீஸ் விசாரணை
விபத்து குறித்து அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்ததும், மிக அதிக வேகத்தில் கார் சென்றதும் விபத்துக்கு காரணம் என கூறப்பட்டது. பால்கர் மாவட்டத்தில் உள்ள சரோட்டி செக் போஸ்டை கடந்த பிறகு வெறும் 9 நிமிடங்களில் 20 கி.மீ. தூரத்தை கார் கடந்துள்ளது தெரியவந்துள்ளது.

அதிவேகமே காரணம்
இதன் மூலம் கார் எவ்வளவு வேகத்தில் சென்றிருக்கும் என்றும், அதிக வேகத்தின் காரணமாகவே இந்த விபத்து நடந்துள்ளதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அந்த செக் போஸ்ட் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதிலும் கார் மிக வேகமாக சென்றது கண்டுபிடிக்கபட்டது. வெறும் 9 நிமிடங்களில் அந்த கார் 20 கி.மீ தூரத்தை கடந்தது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டது.

பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியீடு
இந்த நிலையில், கார் விபத்துக்குள்ளாகும் சில நிமிடங்களுக்கு முன்பு சைரஸ் மிஸ்திரி செல்லும் காரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. தெப்ஜாரி ஆர்.டி.ஓ சோதனைச்சாவடியை கடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அந்த வீடியோ காட்சியில், ''பரபரப்பான நான்கு வழிச்சாலையில் சைரஸ் மிஸ்திரி செல்லும் கார் வேகமாக கடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ காட்சியினை வைத்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications