விபத்து நடப்பதற்கு சில நிமிடம் முன்பு.. சைரஸ் மிஸ்திரி சென்ற காரின் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
மும்பை: சைரஸ் மிஸ்திரி சென்ற கார் விபத்துக்குள்ளாகி இருக்கும் நிலையில், விபத்துக்குள்ளாகும் சில நிமிடங்களுக்கு முன் அந்த கார் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர் சைரஸ் மிஸ்திரி.
சைரஸ் மிஸ்திரி குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு நேற்று தனது காரில் பயணம் மேற்கொண்டார்.

கார் விபத்து
மும்பை அருகே உள்ள பால்கர் மாவட்டத்தின் சூர்யா ஆற்றுப்பாலம் அருகே சென்றுகொண்டிருந்த போது திடீரென அவரது கார் விபத்துக்குள்ளானது. இதில் சைரஸ் மிஸ்திரி மற்றும் அவருடன் பயணித்த ஜஹாங்கிர் பன்டோல் ஆகிய இருவரும் பலியாகினர். இந்த விபத்தில் சைரஸ் மிஸ்திரி தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். ஜஹாங்கிருக்கு இடது காலில் எலும்பு முறிவும் தலையில் காயமும் ஏற்பட்டது.

போலீஸ் விசாரணை
விபத்து குறித்து அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்ததும், மிக அதிக வேகத்தில் கார் சென்றதும் விபத்துக்கு காரணம் என கூறப்பட்டது. பால்கர் மாவட்டத்தில் உள்ள சரோட்டி செக் போஸ்டை கடந்த பிறகு வெறும் 9 நிமிடங்களில் 20 கி.மீ. தூரத்தை கார் கடந்துள்ளது தெரியவந்துள்ளது.

அதிவேகமே காரணம்
இதன் மூலம் கார் எவ்வளவு வேகத்தில் சென்றிருக்கும் என்றும், அதிக வேகத்தின் காரணமாகவே இந்த விபத்து நடந்துள்ளதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அந்த செக் போஸ்ட் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதிலும் கார் மிக வேகமாக சென்றது கண்டுபிடிக்கபட்டது. வெறும் 9 நிமிடங்களில் அந்த கார் 20 கி.மீ தூரத்தை கடந்தது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டது.

பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியீடு
இந்த நிலையில், கார் விபத்துக்குள்ளாகும் சில நிமிடங்களுக்கு முன்பு சைரஸ் மிஸ்திரி செல்லும் காரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. தெப்ஜாரி ஆர்.டி.ஓ சோதனைச்சாவடியை கடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அந்த வீடியோ காட்சியில், ''பரபரப்பான நான்கு வழிச்சாலையில் சைரஸ் மிஸ்திரி செல்லும் கார் வேகமாக கடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ காட்சியினை வைத்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications