சைக்கோ மாப்பிள்ளை.. முதலிரவு அறையிலிருந்து அலறிய மணமகள்.. ஓடிப்போய் பார்த்து அதிர்ந்த உறவினர்கள்
நாகை: நாகையில் புதுமணப்பெண்ணுக்கு இயற்கைக்கு மாறாக பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக மணமகன் மீது பெண் வீட்டார் புகார் கொடுத்தனர்.
Recommended Video
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரைச் சேர்ந்த நாகராஜன். இவரது மனைவி பரமேஸ்வரி. இவருக்கு 26 வயதில் நளினி என்ற மகள் உள்ளார். இவருக்கும் நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த தொழுதூரை சேர்ந்த பிச்சையனின் மகன் ராஜ்குமாருக்கும் (37) இரு வீட்டார் முன்பு திருமணம் நடைபெற்றது.
கடந்த 27ஆம் தேதி திருமண மண்டபத்தில் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் மணப்பெண் தாய் பரமேஸ்வரி எஸ் பி அலுவலகக்தில் ஒரு புகாரை கொடுத்துள்ளார்.

12 பவுன் நகை
அந்த புகார் மனுவில் பரமேஸ்வரி கூறியிருப்பதாவது: திருமணத்திற்கு வரதட்சிணையாக 12 பவுன் நகை , பைக் மற்றும் ரூ 3 லட்சத்திற்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினோம். திருமணத்தின் போது மாப்பிள்ளை வீட்டில் எங்கள் பெண்ணுக்கு முதலிரவு நடந்தது. என் மகளை இயற்கைக்கு மாறாக பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

மகள் அலறல்
மகளின் அலறல் சப்தம் கேட்டு உறவினர்கள் முதலிரவு அறைக்கு ஓடியுள்ளனர். அதை பார்த்து ராஜ்குமார் தப்பிவிட்டார். உடல் முழுவதும் காயங்களுடன் மயங்கி கிடந்த என் மகளுக்கு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மனநலம் பாதித்தவரை போல் நடந்துக் கொண்டுள்ளார்.

ராஜ்குமார் மீது புகார்
எனவே மணமகன் ராஜ்குமாரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். உடல் முழுவதும் காயங்களுடன் சிகிச்சை பெறும் நளினி, அந்த சம்பவத்தை நினைத்து மிகவும் அச்சத்துடனே இருப்பதாகவும் உறவினர்கள் தெரிவிக்கிறார்கள்.

விசாரணை
உண்மையில் ராஜ்குமார் மனநலம் பாதிக்கப்பட்டவரா, கல்யாணம் பண்ணா சரியாகிடும் என்ற நம்பிக்கையில் அவரது பெற்றோர் தங்களது மகனுக்கு நளினியை திருமணம் செய்து வைத்தனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது. லட்சக்கணக்கில் கொட்டி கொடுத்து மகளை திருமணம் செய்து கொடுத்தும் இப்படி ஒரு சூழலால் மணமகள் வீட்டார் வேதனையில் உள்ளனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications