பீகார் இறுதி கட்ட வாக்குப் பதிவு: 31% வேட்பாளர்கள் கிரிமினல்கள்; 30% கோடீஸ்வரர்கள்!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் இறுதி கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 78 தொகுதிகளில் 31% வேட்பாளர்கள் கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டிருப்பவர்கள். இவர்களில் 30% வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்.
Recommended Video
பீகார் சட்டசபை தேர்தலில் இறுதி கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெறுகிறது. 16 மாவட்டங்களில் 78 தொகுதிகளில் இந்த வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த இறுதி கட்ட களத்தில் மொத்தம் 1208 பேர் வேட்பாளர்களாக உள்ளனர். இவர்களில் 110 பேர் பெண்கள். இந்த வேட்பாளர்களின் குற்ற பின்னணி, சொத்து விவரம் குறித்த ஆய்வுகளை ஜனநாயக சீரமைப்புக்கான அமைப்பு மற்றும் பீகார் தேர்தல் கண்காணிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

குற்றப் பின்னணி
இதில், ஆர்ஜேடியின் மொத்தம் 44 வேட்பாளர்களில் 32 பேர் அதாவது 73% பேர் குற்ற பின்னணி உடையவர்கள். இவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 22 பேர் மீது கொலை, பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

பாஜக, இதர கட்சிகள்
பாஜகவின் 34 வேட்பாளர்களில் 26 பேர் குற்ற பின்னணி உடையவர்கள். இதில் 22 பேர் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஜேடியூவின் 21, காங்கிரஸின் 19, எல்ஜேபியின் 18 வேட்பாளர்கள் மீதும் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

132 வழக்குகளுடன் பப்பு யாதவ்
நாளை வாக்குப் பதிவு நடைபெறும் 78 தொகுதிகளில் 72 தொகுதிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஜேபிபி-எல் கட்சியின் தலைவரான மாதேபுரா தொகுதியில் போட்டியிடும் பப்பு யாதவ் மீது மட்டும் 132 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

கோடீஸ்வர வேட்பாளர்கள்
ஆர்.எல்.எஸ்.பி வேட்பாளர் பிகே சிங்தான் நாளை தேர்தலை எதிர்கொள்ளும் வேட்பாளர்களில் கோடீஸ்வரர். அவரது சொத்து மதிப்பு ரூ85.89 கோடி. அவருக்கு அடுத்ததாக ரூ45.37 கோடி சொத்து மதிப்புள்ளவர் ஆர்ஜேடி வேட்பாளர் ஓம்பிரகாஷ் செளத்ரி. சுயேட்சை வேட்பாளரான ஷங்கர் குமார் ஜாவுக்கு ரூ32.19 கோடி சொத்துகள் உள்ளனவாம். ஆர்ஜேடியின் 35 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்; பாஜக, எல்ஜேபியின் தலா 31 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாம். ஜேடியூவின் 30, காங்கிரஸ் கட்சியின் 17 வேட்பாளர்களின் சொத்து மதிப்பும் கோடிகளை தாண்டியதாம்.

வேட்பாளர்களின் கல்வி அறிவு
499 வேட்பாளர்கள் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள்; 552 வேட்பாளர்கள் பட்டதாரிகள். 126 பேர் கல்வி அறிவு பெற்றவர்கள். 5 பேர் கல்வி அறிவு பெறாதவர்கள். 12 பேர் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications