காவி அணியில் கதர்.. பாஜக அரசுக்கு நன்றி! தமிழக அரசுக்கு அதிகாரமில்ல! ஏழுவர் விடுதலை பற்றி நாராயணசாமி
புதுச்சேரி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி தான் முதல் குற்றவாளி என்றும், தங்களது கோரிக்கையை ஏற்று நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இந்திரா காந்தி திருவுருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.
அதற்கு மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்தியலிங்கம் எம்.பி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு மலர் தூவி மரியதை செலுத்தினர்.

மறு சீராய்வு மனு
இது சமூக நீதிக்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது. இந்த விடுதலையை எதிர்த்து எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி எங்களது கோரிக்கையை ஏற்று மத்திய அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழக அரசுக்கு அதிகாரமில்லை
இதற்கு மத்திய அரசுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்களில் நான்கு பேர் இலங்கையை சேர்ந்தவர்கள். தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி இருந்தாலும் இலங்கையை சேர்ந்தவர்களை விடுதலை செய்ய சொல்ல அவர்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை.

மறு சீராய்வு மனு
தேவைப்படும் பட்சத்தில் மறு சீராய்வு மனுவில் காங்கிரஸ் கட்சியும் தங்களை இணைத்துக் கொள்ளும் என்று தெரிவித்தார். மேலும் ஒரு நாட்டின் பிரதமரை கொலை செய்தவர்கள் விடுதலையானதை சில அரசியல் கட்சிகள் கொண்டாடுகிறார்கள். இது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜனநாயகத்துக்கு எதிரானது
பல்வேறு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு 40 ஆண்டு காலம் எல்லாம் சிறையில் இருக்கிறார்கள் ஆனால் 30 ஆண்டு காலம் இவர்கள் இருந்தார்கள் என்பதற்காக விடுதலை செய்வது ஜனநாயகத்திற்கு எதிரானது." என்றார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டது உலகையே உலுக்கியது.

தீர்மானம்
பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் கைதான 7 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கியது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நிலையில் 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

6 பேர் விடுதலை
ஆனால் தமிழக ஆளுநர் அதை கிடப்பில் போட்டார். இந்த நிலையில் கடந்த மே மாதம் பேரறிவாளனை சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. அதே அதிகாரத்தை பயன்படுத்தி தங்களை விடுதலை செய்திடுமாறு நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications