அன்னவாசல் பேரூராட்சி தலைவர் தேர்தலில் திமுகவினர் சாலை மறியல்.. அமைச்சர் பேச்சுவார்த்தை
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பேரூராட்சித் தலைவர் தேர்தலில் திமுக- போலீஸாரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு தடியடி நிகழ்த்தப்பட்டது. இதில் திமுகவினர் சிலர் காயமடைந்ததால் போலீஸாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டையில் கடந்த 19 ஆம் தேதி 2 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இன்று நகர்மன்றம், பேரூராட்சி தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்று வருகிறது.
மாவட்டத்தில் உள்ள இரு நகராட்சிகளையும் 6 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதியில் உள்ள அன்னவாசல் பேரூராட்சியை அதிமுக கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளது.

கவுன்சிலர்கள்
இந்த நிலையில் அந்த பேரூராட்சிக்குள்பட்ட கவுன்சிலர்கள் கடத்தப்படலாம் என்பதால் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோரிடம் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மனு கொடுத்திருந்தார். தொடர்ந்து நீதிமன்றத்தையும் நாடி பாதுகாப்பு கேட்டு மனு அளித்திருந்தனர். நீதிமன்றமும் அதிமுக கவுன்சிலர்களுக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை அடுத்து 2ஆம் தேதி 30 வாகனங்கள் அணிவகுக்க போலீஸ் பாதுகாப்புடன் அதிமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் கவுன்சிலர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

நீதிமன்றம்
அவர்கள் பேரூராட்சி அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது அவர்களது இரு சக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படடனர். இந்த நிலையில் இன்று பேரூராட்சி தலைவர் தேர்தல் நடந்து வரும் போது ஆளும் கட்சியினரால் பிரச்சினை ஏற்படாமல் இருக்க மீண்டும் பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தை அதிமுக கவுன்சிலர்கள் நாடினர். இதையடுத்து இதற்கான உத்தரவையும் பெற்றனர்.

500 போலீஸார் குவிப்பு
இன்று காலை 6.30 மணிக்கு அதிமுக சார்பில் கவுன்சிலர்கள் பேரூராட்சி வளாகத்திற்குள் வந்து விட்டனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இருந்தும் தற்போது பேரூராட்சி முன்பாக திமுக - அதிமுக திரண்டதால் பதற்றம் நீடித்தது. திமுகவினர் போலீஸாரின் தடுப்புகளை தள்ளிக் கொண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தள்ளுமுள்ளு
போலீஸாருக்கும் திமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றதால் இதை தடுக்க போலீஸார் தடியடி நடத்தினர். இதில் திமுகவினர் சிலர் தாக்கப்பட்டதால் சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள். அன்னவாசலில் சாலை மறியல் செய்து கொண்டிருக்கும் திமுகவினரை சந்திக்க சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வருகை தந்துள்ளார். தடியடி நடத்திய காவல்துறை மீது முதல்வரிடம் எடுத்துக் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உறுதியளித்தார்.
-
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications