சேலம்: வெறிநாய் கடித்து 16 பேர் காயம்- மருத்துவமனையில் நோயாளிகள் கூட்டம்
சேலம்: சேலம் மாநகராட்சிக்குள்பட்ட 56-ஆவது டிவிசன் கருங்கல்பட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு வெறிநாய் கடித்துக் குதறியதில் சிறுமி உள்பட 16 பேர் பலத்த காயமடைந்தனர்.
கருங்கல்பட்டி பிரதான சாலைப் பகுதியில் ஏராளமான அளவில் சில்லி சிக்கன்கடைகள் உள்ளன. இந்தக் கடைளில் உள்ள கழிவுப் பொருள்களைச் சாப்பிடுவதற்காக அந்தப் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் உலாவி வருகின்றன.
இந்த நாய்களைப் பிடிக்கக் கோரி, அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த வாரம் மேயர் சௌண்டப்பனைச் சந்தித்து மனு அளித்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி அளவில் கருங்கல்பட்டி வீரலட்சுமி வித்யாலயா பள்ளிப் பகுதியில் வெறிநாய் ஒன்று பொதுமக்களை கடித்துக் குதறியது.

16பேர் காயம்
இதில், அந்தப் பகுதியைச் சேர்ந்த நிர்மலா, பூபதி, மகாலட்சுமி, மணிமேகலை, கிருஷ்ணம்மாள், விஜயா, ராஜாராம், செந்தில், பழனிசாமி, பிரபு, அசோகன், சுரேஷ், கார்த்தி, பாஜக மாவட்டச் செயலர் செல்வராஜ், 10 வயது சிறுமி புனிதா உள்பட 16 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் சேலம் அரசு அதிநவீன மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக சென்றனர்.

மருத்துவமனையில் கூட்டம்
ஆனால், அங்கு அனைவருக்கும் ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேயர் ஆறுதல்
இதுகுறித்து தகவல் கிடைத்ததும், சேலம் மேயர் சௌண்டப்பன், சேலம் எம்பி வி.பன்னீர்செல்வம், தெற்குத் தொகுதி எம்எல்ஏ எம்.கே.செல்வராஜ் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.

முற்றுகையிட்ட பொதுமக்கள்
அப்போது, அங்குள்ள பொதுமக்கள் கடந்த வாரமே தெருநாய்களைப் பிடிக்க மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால்தான் தற்போது வெறிநாய் கடித்துள்ளது என்று கூறி மேயர் சவுண்டப்பனை முற்றுகையிட்டனர்.

நாய்களைப் பிடிக்க நடவடிக்கை
அப்போது மேயர், சேலம் மாநகராட்சிப் பகுதியில் தெருநாய்களைப் பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சுகாதாரத்துறைக்கு உத்தரவு
மேலும், நாய்கள் பெருக்கத்திற்கு காரணமாகக் கூறப்படும் சாலையோர சில்லி சிக்கன் கடைகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க சுகாதாரத் துறைக்கு உத்தரவு வழங்கப்படும் என்றார் மேயர்.

அடித்துக்கொலை
இதற்கிடையே, பொதுமக்களைக் கடித்த வெறிநாயை செவ்வாய்க்கிழமை இரவு அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அடித்துக் கொன்றனர்.
-
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்












Click it and Unblock the Notifications