Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆடிப்பெருக்கு..தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் - சேலம் மாவட்டத்திற்கு ஆக.3ல் உள்ளூர் விடுமுறை

Subscribe to Oneindia Tamil

சேலம்: ஆடிப்பெருக்கு மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் ஆகியவற்றை முன்னிட்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா காரணமாக குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளதால் ஆடி பெருக்கு வருகிற ஆகஸ்ட் 3ஆம் தேதி நீர்நிலைகளில் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் ஆடிப்பெருக்கு மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் ஆகியவற்றை முன்னிட்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Aadi perkku: Salem district collector annouces local holiday on Aug.3rd 2022

அத்துடன் கோட்டை மாரியம்மன் ஆடிப் பண்டிகை திருவிழாவை காண சேலம் மாவட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆடி 18ம் தேதி, தமிழகம் முழுவதும் ஆற்றங்கரைகளில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் விழா ஆடிப்பெருக்கு. காவிரி ஆறு தமிழகத்தில் கால் பதிக்கும் ஒகேனக்கல்லில் இருந்து வங்க கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.

விவசாயத்திற்கும் குடிநீருக்கும் உதவி செய்யும் தண்ணீருக்கு நன்றி சொல்லும் விதமாக படையலிட்டு காவிரி,வைகை, தாமிரபரணி அன்னையரை மக்கள் வழிபட்டனர். காவிரிக்கு 'தட்சிண கங்கை' என்கிற சிறப்புப் பெயர் உண்டு. அதாவது, தெற்கே பாய்கிற புனிதமான கங்கைதான் இந்தக் காவிரி.

இந்த நதியில் அறுபத்தாறு கோடி தீர்த்தங்கள் உள்ளன. 'காவிரியில் நீராடினால் ஒருவர் செய்த பாவங்கள் நீங்கி விடும்' என்று ராம பிரானுக்கு வசிஷ்டர் சொல்லி இருக்கிறார். இவற்றை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்ட ராமபிரானும் ராவணனைக் கொன்ற பாவம் தீர காவிரியில் நீராடினான் என்றும், அந்த நாளே ஆடிப்பெருக்கு என்கிற தகவலும் ஆன்மிக நூல்களில் காணப்படுகின்றன. ஆடிப்பெருக்கன்று வழிபாடு செய்தால் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்று ஜோதிடமும் சொல்கிறது.

ஆடி பெருக்கு வருகிற ஆகஸ்ட் 3ஆம் தேதி நீர்நிலைகளில் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் ஆடிப்பெருக்கு மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் ஆகியவற்றை முன்னிட்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+