பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. கைதானவர்களுக்கு சாலையோரம் கொடுத்த 'சலுகை..' 7 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்
சேலம்: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதாகியுள்ளவர்களுக்கு சலுகை காட்டிய 7 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர்களை விதிமுறைகளை மீறி உறவினர்களை சந்திக்க அனுமதித்ததால் 7 காவலர்களை சஸ்பெண்ட் செய்து சேலம் கமிஷனர் நஜ்மல் ஹோதா நடவடிக்கை எடுத்துள்ளார்.
Recommended Video
தமிழ் நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட வசந்தகுமார், திருநாவுக்கரசு, மணிவண்ணன், சதீஷ் மற்றும் சபரிராஜன் ஆகியோர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வழக்கு விசாரணைக்காக நேற்று, சேலம் சிறையில் இருந்து அழைத்து செல்லப்பட்டு கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் மீண்டும் காவல்துறை வாகனம் மூலம் சேலத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

வழியில் நிறுத்தப்பட்ட காவல்துறை வாகனம்
அப்போது காவல்துறை வாகனம், கோவை விமான நிலையம் அருகே இடையில் நிறுத்தப்பட்டது. அங்கே ஏற்கனவே 8 கார்களில் கைதாகியுள்ள நபர்களின் குடும்பத்தினர் வந்து காத்திருந்தனர். அங்கே வைத்து, நான்கு நபர்களும், அவரவர் உறவினர்களை சந்தித்து பேச அனுமதிக்கப்பட்டனர். காவல்துறை வேன் நடுவழியில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் உறவினர்கள் அங்கே சந்திப்பு நடத்திய விவகாரம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் நீதிமன்ற அனுமதி பெறாமல் இவ்வாறு குற்றம்சாட்டப்பட்ட நபர்களை சந்திக்க கூடாது என்பது விதிமுறையாகும். நீதிமன்ற அனுமதியை பெற்றாலும் நீதிமன்ற வளாகத்தில் வைத்துதான் சந்தித்து பேச முடியுமே தவிர, காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது வழி மறித்து பேசவே கூடாது.

7 பேர் சஸ்பெண்ட்
விதிகளை மீறி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக சேலம் மாநகர காவல் ஆணையாளர் முதற்கட்ட விசாரணை மேற்கொண்ட நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியம் உட்பட காவலர்கள் 7 பேரை பணி இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டார். ஏழு பேரிடம் துறை ரீதியான விசாரணை நடத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளார் கமிஷனர்.

வழக்கு விசாரணை
இதனிடையே, மகளிர் நீதிமன்றத்தில் நேற்றைய நீதிமன்ற விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கும் வழங்கப்பட்ட குற்றப்பத்திரிகை நகலில், பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த வாக்குமூலம் அடங்கிய சில ஆவணங்கள் விடுபட்டு உள்ளதாகவும், அவற்றை வழங்க கோரியும் அவர்களது தரப்பு வக்கீல்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.

ஒத்தி வைப்பு
அவர்களுக்கு, குற்ற நகலில் விடுபட்ட கூடுதல் ஆவணங்கள் வழங்கப்பட்ட நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கை வரும் 28ம் தேதிக்கு தள்ளி வைத்தார் நீதிபதி நந்தினிதேவி. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லுாரி மாணவிகள் மற்றும் குடும்ப பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய வழக்கில், அதிமுக மாணவரணி பிரமுகர் அருளானந்தம் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டு, சேலம் மற்றும் கோபி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கோவை மகளிர் நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், விரைவில் சாட்சி விசாரணை துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications