15 சிக்ஸ், 15 பவுண்டரி.. உலகக்கோப்பை பைனலில் வெறியாட்டம்.. 175 ரன்களை விளாசிய வைபவ் சூர்யவன்ஷி!
ஹராரே: யு19 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி 80 பந்துகளில் 15 சிக்ஸ், 15 பவுண்டரி உட்பட 175 ரன்களை விளாசி சாதனை படைத்துள்ளார். 55 பந்துகளில் சதம் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி, அடுத்த 25 பந்துகளில் 75 ரன்களை குவித்திருப்பது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
யு19 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் தொடக்க வீரராக வைபவ் சூர்யவன்ஷி - ஆரோன் ஜார்ஜ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் ஆரோன் ஜார்ஜ் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

வைபவ் சூர்யவன்ஷி ஆட்டம்
இதன்பின் வைபவ் சூர்யவன்ஷி - ஆயுஷ் மாத்ரே கூட்டணி இணைந்தது. முதல் சில பந்துகளில் நிதானம் காட்டிய வைபவ் சூர்யவன்ஷி, அதன்பின் அதிரடிக்கு திரும்பினார். அதேஒபோல் ஆயுஷ் மாத்ரேவும் 4, 4, 6 என்று அதிரடியாக விளையாட, இந்திய அணி 8 ஓவர்களிலேயே 50 ரன்களை கடந்து சென்றது.
ஆயுஷ் மாத்ரே அதிரடி
தொடர்ந்து மறுமுனையில் வைபவ் சூர்யவன்ஷி 6, 4, 4, 4 என்று அடுத்த ஓவரிலேயே விளாசினார். இதனால் 32 பந்துகளில் அவர் அரைசதத்தையும் எட்டினார். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து பவுலர்கள் என்ன திட்டத்துடன் பவுலிங் செய்யலாம் என்பதே புரியாமல் திணறிக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு ஓவரிலும் சிக்ஸ், பவுண்டரி என்று பறந்து கொண்டே இருந்தது.
55 பந்துகளில் சதம்
அதிலும் ஃபர்ஹான் அஹ்மத் வீசிய 17வது ஓவரில் 6,6, 4, 6 என்று விளாசினார். இதனால் 55 பந்துகளில் வைபவ் சூர்யவன்ஷி சதம் விளாசி சாதனை படைத்தார். இதன்பின் வைபவ் சூர்யவன்ஷி ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார். எந்த பவுலர், என்ன பந்து என்ற கணக்கே இல்லாமல் பவுண்டரிக்கும், சிக்சருக்கும் பேட்டை ஓங்கி கொண்டே இருந்தார்.
சாதித்த வைபவ் சூர்யவன்ஷி
71 பந்துகளில் 150 ரன்களை கடந்த சூர்யவன்ஷி, இரட்டை சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இறுதியாக 80 பந்துகளில் 15 சிக்ஸ், 15 பவுண்டரி உட்பட 175 ரன்களை எடுத்திருந்த போது, ஸ்லோயர் பந்தை கணிக்காமல் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் யு19 உலகக்கோப்பை வரலாற்றிலேயே மிக முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது.
இங்கிலாந்து வீரர்களின் செயல்
இதன்பின் வைபவ் சூர்யவன்ஷி பெவிலியன் நோக்கி நடந்த வந்த போது, ஒட்டுமொத்த இங்கிலாந்து வீரர்களும் அவருக்கு கை கொடுத்து பாராட்டு தெரிவித்தனர். அதேபோல் இந்திய அணியின் அத்தனை வீரர்களும் எழுந்து நின்று பாராட்டு கூறினர். இதனால் வைபவ் சூர்யவன்ஷி விரைவில் இந்திய அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications