சிங்கள எம்பிக்கள் எதிர்ப்புக்கு பணிந்த சிறிசேன... இந்தியாவுக்கான பாலம் இல்லை என மறுப்பு
கொழும்பு: சிங்கள எம்.பிக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்தியா- இலங்கை இடையே பாலம் கட்டப் போவதில்லை என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்தியா- இலங்கை இடையே பாலம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான பணிகளும் தொடங்கப்படும் என கூறப்பட்டு வருகிறது. இதை இலங்கை அமைச்சர்களும் ஆமோதித்து கூறி வந்தனர்.

ஆனால் இலங்கையின் தலைமன்னாரை இந்தியாவின் தனுஷ்கோடியுடன் இணைக்கும் இப்பாலத்துக்கு சிங்களர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இத்தகைய பாலம் அமைத்தால் எதிர்காலத்தில் தமிழ்நாட்டுக்கு இலங்கை அடிமைப்பட்டுபோய்விடும் என்று சிங்கள எம்பி வாசுதேவ நாணயக்கார கூறியிருந்தார்.
மற்றொரு சிங்கள எம்பியோ, இதுபோன்ற ஒரு பாலம் அமைந்தால் இலங்கையின் வடக்கு மாகாணம் தமிழகத்துடன் இணைந்துவிடும். ஆகையால் இந்த பாலத்தை குண்டு வைத்து தகர்ப்பேன் எனக் கூறியிருந்தார்.
இத்தகைய எதிர்ப்புகளைத் தொடர்ந்து தற்போது இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, இந்தியா- இலங்கை இடையே பாலம் அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications